அகந்தையின் உச்சத்தில் வெளிப்படும் கருணையினும்,
அக்கறையின் காரணத்தால் பொங்கிவரும் கோவம் தூயதே!
காமத்தின் தூண்டுதலால் கண்டெடுக்கும் காதலினும்,
காதலின் கொண்டாட்டமாய் வெளிப்படும் காமம் புனிதமே!
மற்றவளை மனதில் கொண்ட மஞ்சத்தின் கொஞ்சலினும்,
தன்னை முழுமனதோடு விலக்கும் வெறுப்பு சிறந்ததே!
உன் உயர்வை அரைமனதோடு ஏற்கும் வாழ்த்தினினும்,
பொறாமையில் வெம்பி உதறும் தவிப்பு உன்னதமே!
இதை கொடு அதை கொடு என்பவனின் பக்தியினும்,
என் வினை என் பலன் என வாழும் பகுத்தறிவு மேலானதே!
வெளிப்படும் நடத்தையை கண்டு ஏமாறும் முன்,
அதன் பின் உள்ள தூண்டலை உணர முயல்வோமா?
அக்கறையின் காரணத்தால் பொங்கிவரும் கோவம் தூயதே!
காமத்தின் தூண்டுதலால் கண்டெடுக்கும் காதலினும்,
காதலின் கொண்டாட்டமாய் வெளிப்படும் காமம் புனிதமே!
மற்றவளை மனதில் கொண்ட மஞ்சத்தின் கொஞ்சலினும்,
தன்னை முழுமனதோடு விலக்கும் வெறுப்பு சிறந்ததே!
உன் உயர்வை அரைமனதோடு ஏற்கும் வாழ்த்தினினும்,
பொறாமையில் வெம்பி உதறும் தவிப்பு உன்னதமே!
இதை கொடு அதை கொடு என்பவனின் பக்தியினும்,
என் வினை என் பலன் என வாழும் பகுத்தறிவு மேலானதே!
வெளிப்படும் நடத்தையை கண்டு ஏமாறும் முன்,
அதன் பின் உள்ள தூண்டலை உணர முயல்வோமா?