நீ சேர்த்த பொருள் உன்னுடையதல்ல!
பின் ஒரு தேவைக்கு பயன்படும்,
அதுவரை நீயே தக்க ரக்ஷகன்,
என்று உன்னிருப்பு வைத்தது தேவதைகள்.
உன் சுற்றம் நீ சேர்த்ததல்ல!
உன் வினைகளை கரைக்க,
ஒத்த வினையுடையோரை உன்னருகில் சேர்த்து,
வினை கரைந்ததும் விலக்கிடும் ஓர் பிரம்ம சூத்திரம்.
உன் ஆரோக்கியம் நீ சமைத்ததல்ல!
சொல் செயல் சிந்தனை என்ற மும்முனை தாக்குதலும்,
அதனை தீவிரமாக ஏற்றுக்கொண்டதால்
ஏற்பட்ட உணர்வோட்டத்தின் விளைவும்.
இக்கட்டில் சிக்கி தவிக்கும் சாமானியனை
காத்து கரையேற்ற முயலும் துணிவும் உன்னுடையதல்ல!
அச்சாமானியனின் குலம் காக்கும் தெய்வம்
உன்னுள் புகுந்து செயல்படுதலே.
தகுதி மட்டுமே உன்னுடையது!
தேவதைகள் பொருள் காக்க உன்னை தேர்வதும்,
நல்லோரை உன்னருகில் கொண்டு சேர்ப்பதும்,
உடலை உணர்வு தாக்காமல் காப்பதும்,
துணிவு ஈர்ப்பு ஈகை உன்னுள் ஊற்றுவிப்பதும்,
உன் தகுதியை பொறுத்தே!
அத்தகுதியை திரட்டுவது மட்டுமே உன் அறம்.
மனம்போல் வாழ்!
சான்றோன் மனம் கோணாமல் வாழ்!
இறைவன் முன் தலைகுனிவு ஏற்படுத்தும் செயல்களை தவிர்.
நிமிர்ந்து நட! நேர்கொண்டு பார்!
உன் தகுதியை அளக்க தகுந்தோரை மட்டும் வணங்கு,
அவர் கருத்திற்கு மட்டும் செவி சாய்!
தனது விருப்பத்தை உன்மேல் திணித்து தவிக்கும் சாமானியரை,
மன்னித்து பழகு! முன்வினையை தீர்க்க வந்தோர் என ஏற்று ஒழுகு!
பின் ஒரு தேவைக்கு பயன்படும்,
அதுவரை நீயே தக்க ரக்ஷகன்,
என்று உன்னிருப்பு வைத்தது தேவதைகள்.
உன் சுற்றம் நீ சேர்த்ததல்ல!
உன் வினைகளை கரைக்க,
ஒத்த வினையுடையோரை உன்னருகில் சேர்த்து,
வினை கரைந்ததும் விலக்கிடும் ஓர் பிரம்ம சூத்திரம்.
உன் ஆரோக்கியம் நீ சமைத்ததல்ல!
சொல் செயல் சிந்தனை என்ற மும்முனை தாக்குதலும்,
அதனை தீவிரமாக ஏற்றுக்கொண்டதால்
ஏற்பட்ட உணர்வோட்டத்தின் விளைவும்.
இக்கட்டில் சிக்கி தவிக்கும் சாமானியனை
காத்து கரையேற்ற முயலும் துணிவும் உன்னுடையதல்ல!
அச்சாமானியனின் குலம் காக்கும் தெய்வம்
உன்னுள் புகுந்து செயல்படுதலே.
தகுதி மட்டுமே உன்னுடையது!
தேவதைகள் பொருள் காக்க உன்னை தேர்வதும்,
நல்லோரை உன்னருகில் கொண்டு சேர்ப்பதும்,
உடலை உணர்வு தாக்காமல் காப்பதும்,
துணிவு ஈர்ப்பு ஈகை உன்னுள் ஊற்றுவிப்பதும்,
உன் தகுதியை பொறுத்தே!
அத்தகுதியை திரட்டுவது மட்டுமே உன் அறம்.
மனம்போல் வாழ்!
சான்றோன் மனம் கோணாமல் வாழ்!
இறைவன் முன் தலைகுனிவு ஏற்படுத்தும் செயல்களை தவிர்.
நிமிர்ந்து நட! நேர்கொண்டு பார்!
உன் தகுதியை அளக்க தகுந்தோரை மட்டும் வணங்கு,
அவர் கருத்திற்கு மட்டும் செவி சாய்!
தனது விருப்பத்தை உன்மேல் திணித்து தவிக்கும் சாமானியரை,
மன்னித்து பழகு! முன்வினையை தீர்க்க வந்தோர் என ஏற்று ஒழுகு!