May 14, 2018

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?
நினைவுகள் அற்ற நிலையில் இருந்தது
அவசியம் ஏற்படும்போது மட்டுமே நினைப்பவனுக்கு!

நீர் விலகி வழிவிடும்..
ஐம்பூதங்களில் இருந்தது விலகி வசித்து
தேவை ஏற்பட ஆணை இடுபவனுக்கு!

தொட்டவுடன் பிணி நீங்கும்..
பிரபஞ்ச சக்தி நிறைந்து வழியும்
ஸ்தூல உடலோன் மனமிரங்கி தொட்டால்!

கண்டவுடன் கன்மம் விலகும்..
என்றும் அகம் நோக்கி இருப்பவன்
என்றேனும் கனிவால் கண்கொண்டு நோக்கின்!
Posted on by Hari

May 11, 2018

விளம்பாதே!

செல்வ விளம்புகை கீழானோர் செயல்
ஆற்றல் விளம்புதல் அறிவற்றோர் செயல்
யவ்வன விளம்பல் அநாகரீக செயல்
அறிவு விளம்பை மும்மூடர் செயல்
ஆசார விளம்பியல் அனாசார செயல்
ஞான விளம்பு பரிகசிக்கும் செயல்
Posted on by Hari

விதிவிலக்கு

பேரழகி
மாவீரன்
பெருஞ்செல்வந்தர்
அறிவாளி
மெய்ஞானி
சாதிமதபேத மண்டாது

அதிசய ஆற்றல்
அரிய சத்து
தனிப்பட்ட சுவை
மருத்துவ குணம்
பல்நாள் பசி
உணவு கட்டுப்பாடு உடைத்தெறியும்

நிலநடுக்கம்
பெருவெள்ளம்
காட்டுதீ
பெரும்பஞ்சம்
போர்காலம்
சமூக சீர்பாடு செயலிழக்கும்

எவ்விதிக்கும் விதிவிலக்குண்டு
Posted on by Hari

May 3, 2018

வளர்ச்சி ஆகுமோ?

உயர் நிலை கண்டு கீழ் நிலை கைவிடுதல்
வளர்ச்சி என்றாய்
உயர் நிலை கீழ் நிலை எதுவென
பகுத்தறிய மறந்தாய்

வேட்டையாடி வாடியபின் விவசாய பற்று கொண்டு
உணவியல் வளர்ச்சி என்றாய்
தானியம் காய் கனி சத்தறிந்து உண்டு பழகி
மீண்டும் மாமிச மோகம் கொண்டாய்

விளைச்சல் பலரை சேர்ந்தடைய செய்து
பங்கீட்டு வளர்ச்சி என்றாய்
பங்குசந்தைகள் அமைத்து லாபத்திற்கு தரத்தோடு
அடிப்படை தன்மையும் அடகு வைத்தாய்

இயற்கையோடு ஒன்றி சமூக நுட்பமமைத்து
பரிணாம வளர்ச்சி என்றாய்
இயற்கை அழித்து சில இனத்தையும் அழித்து
வெற்று பொருளீட்டி மகிழ்ந்தாய்

விண்வெளி அமைப்பை ஆராய்ந்து தொகுத்து
விஞ்ஞான வளர்ச்சி என்றாய்
விண்வெளி கோள் அமைத்து வளங்களை சூறையாட
வனங்களை அழித்தாய்

உண்டு உறங்கி நாட்கள் கழித்து சலித்து ஆலயமமைத்து
ஆன்மீக வளர்ச்சி என்றாய்
உண்டு உறங்கி நாட்கள் சலித்து கழித்து ஆன்ம குமுறலுக்கு
செவிகொடுக்க மறந்தாய்

வந்த காரணம் அறிய அகமும் புறமும் தேடல்
மெய்யரிவு வளர்ச்சி என்றாய்
வந்தோம் வாழ்ந்தோம் என்றிருந்து படைப்பாற்றல்
ஆக்குத்திறன் வீணாக்கி சென்றாய்

பஞ்சபூத கட்டுப்பாடு கடந்தவனை தேடி வணங்கல்
மெய்ஞ்ஞான வளர்ச்சி என்றாய்
அச்சான்றோனை கண்டறிய தவறி கெக்கலித்தது
வந்த வாய்ப்பும் இழந்தாய்

மண்ணையும் மரத்தையும் காத்து வாழ்தலே
நிலையான வளர்ச்சி என்றாய் 
குழைம பொருட்களும் அவற்றை இயக்கும் சிற்றறிவும்
வளர்ச்சி என்று பூரித்தாய்

சீரென வாழ்வமைத்து.. நல்வளங்களை கண்டறிந்து..
சமூக சீற்பாட்டில் பங்கேற்று.. மனைவாழ்பவரை மகிழ்வித்து..
சிறந்த ஆரோக்கியம் பேணித்து.. மிக தெளிந்த மனம்கொண்டு..
சித்தனை வணங்கி சரணடைந்து.. பிறவா வித்தை கற்று பழகி..

ஏகஜோதியான பரம்பொருளோடு ஐக்கியமாவாயா?
மீண்டுமொரு யோனிவழி பிறப்பெடுத்து வளர்ச்சி நாடுவாயா?
Posted on by Hari