Feb 24, 2024

உன்னத நிலை

உடை கழிவு துவைத்தால் விலகும்
உடல் கழிவு நீராட நீங்கும்

மான கழிவு வெற்றியில் மறக்கும்
மன கழிவு உன்மத்தத்தில் தளரும்

உணர்வால் பொய்த்தல் உயிர் பிணியாகும்
குவிந்த கர்மவினை அடுக்குகளின் அறிகுறியாகும்

உணர்வு பொய்யாதிருத்தலே,
ஆன்மீக முன்னேற்றத்தின் அளவுகோல்!

உணர்வு தூய்மையே உன்னத நிலை!
Posted on by Hari

எதற்கு?

அறிவு எதற்கு?
சுழற்சி முறைகளை கண்டு களைய.

துணிவு எதற்கு?
தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க.

அழகு எதற்கு?
அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன்னையும் மறந்து வியக்க.

செல்வ வளம் எதற்கு?
அறிவால் பற்றாக்குறை அறிந்து, துணிவாய் தீர்க்க.

செல்வாக்கு எதற்கு?
நம்பினோரை நல்வழி நடத்த.

சேவைகள் எதற்கு?
பொதுநலம் பேனி, சுயநலம் கடக்க.

நட்ப்பு எதற்கு?
நம்பிக்கை பழக.

காதல் எதற்கு?
கர்வம் தகர்க்க.

மகப்பேறு எதற்கு?
சுயரசனையை கடக்க.
Posted on by Hari

எதற்கு?

ஆடல் பாடல் கேளிக்கையும் எதற்கு?
முன்னும் பின்னும் உலவும் மனத்தை
இங்ஙனம் நிறுத்தி களிப்பதற்கு.

ஆர்வமும் ஈர்ப்பும் கல்வியும் எதற்கு?
பரவிக்கிடக்கும் மனோசக்தியை ஒன்று திரட்டி
ஓரிடத்தில் கவனம் வைத்து பழகுவதற்கு.

முயற்சியும் பயிற்சியும் உழைப்பும் எதற்கு?
நம் நேரத்தையும் கவனத்தையும் கவர்ந்து வீணாக்கும்
செயல்களில் வசப்படாமல் ஒழுக்கம் பயில்வதற்கு.

பூசையும் தொழுகையும் ஆன்மீகமும் எதற்கு?
விருப்பு வெறுப்பு கொண்ட மனம்
தக்கதொரு ஆளுமையை பற்றி நடுநிலை அடைவதற்கு.

தியானமும் தவமும் யோகமும் எதற்கு?
கவனத்தில் நிபுனமும் முயற்சியில் வெற்றியும் பலகண்டு
தானாய் தோன்றும் தொய்வால் மறுபிறப்பு அறுப்பதற்கு.
Posted on by Hari

Feb 7, 2024

எது சைவம்?

அசைவின்றி அமர்கையில்
உள்ளிறங்கும் அமிழ்தை
மட்டும் உண்டு
உலவுபவனே சைவன்
Posted on by Hari