ஆடல் பாடல் கேளிக்கையும் எதற்கு?
முன்னும் பின்னும் உலவும் மனத்தை
இங்ஙனம் நிறுத்தி களிப்பதற்கு.
ஆர்வமும் ஈர்ப்பும் கல்வியும் எதற்கு?
பரவிக்கிடக்கும் மனோசக்தியை ஒன்று திரட்டி
ஓரிடத்தில் கவனம் வைத்து பழகுவதற்கு.
முயற்சியும் பயிற்சியும் உழைப்பும் எதற்கு?
நம் நேரத்தையும் கவனத்தையும் கவர்ந்து வீணாக்கும்
செயல்களில் வசப்படாமல் ஒழுக்கம் பயில்வதற்கு.
பூசையும் தொழுகையும் ஆன்மீகமும் எதற்கு?
விருப்பு வெறுப்பு கொண்ட மனம்
தக்கதொரு ஆளுமையை பற்றி நடுநிலை அடைவதற்கு.
தியானமும் தவமும் யோகமும் எதற்கு?
கவனத்தில் நிபுனமும் முயற்சியில் வெற்றியும் பலகண்டு
தானாய் தோன்றும் தொய்வால் மறுபிறப்பு அறுப்பதற்கு.