கண்ணாடி இருக்க
கண்நாடி காணான்
கண்நாடி கண்டபின்
கண்ணாடாதிருப்பனே
கண்நாடி காணான்
கண்நாடி கண்டபின்
கண்ணாடாதிருப்பனே
கலையே வா நீ என்றிருக்க கலைவாணி
இலக்கை அடைய முனைவோருக்கு இலக்குமி
பார் வகார தீ என்றுணர்த்தும் பார்வதி
அண்ணாக்கின் மேல் பூரணத்தை காண அன்னபூரணி
ஆன்ம விளக்கிற்கு காயமே திரி என்று காயத்திரி
பூமி மாரி பச்சை நீலம் என அனைத்தையும் அன்னையாய்
வணங்கி வாழும் வாழையடி வாழை மரபில் வந்தோர் நாம்!
மூடகங்கள் பயில்விக்கும் பெண்ணிய கருத்துகளை கேட்டு
முனிவர்கள் வகுத்த கோட்பாட்டை கெக்கலிக்கலாமா?