Jul 24, 2018

சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?

சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?

தவறான செயல், சரியான காரணம், சரியா தவறா?
தவறானவன், சரியான செயல், தவறாகுமா?
தவறின் விளைவு செரியாயின், தவறும் சரியாகுமா?
தவறை சரிசெய்ய செய்த தவறும் தவர்தானா?

சரி தவறை பகுத்துரைப்பவன் சரியானவனா?
தவறிய சிந்தை சரியாயினும் தவறானவனா?
சரி தவறுக்கு அளவுகோல் இழைத்தல் சரியாகுமா?
சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?
Posted on by Hari

Jul 19, 2018

இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?

நல்லவன் வல்லவன் என்ற
வீணர்களின் நிலையற்ற கருத்திற்கு

நியமம் கெட்டு...
உடல் வருத்தினாய்
மனம் அடக்கி தவித்தாய்
மஹான் என்றார்கள்

இயமம் கெட்டு...
சகமனிதனை சூரையாடினாய்
இயற்கையை துயிலுரித்தாய்
ஆற்றல் மிக்கவன் என்றார்கள்

ஆடம்பரத்திற்கு அத்தியாவசியத்தை
அடகு வைத்து தரம் கெட்டு திரியும்
ஆட்டு மந்தைகளா உன்னை வழிநடத்துவது?

இயற்கையை இழைத்து இறைச்சியாக்கி
சுகிக்கும் சமூகத்தோடு ஒன்றிவாழ
இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?
Posted on by Hari

உன் ஆசைகள் உன்னுடையதா?

நட்பயிர் விளைய ரசாயன உப்பு அவசியமில்லை
வேதியல் கழிவும், அகற்றும் உப்பையும் விற்க
ஆயிரம் ஆண்டுகளாக செய்த விவசாய முறையே தவறு
என்றால் நீ ஏன் நம்பினாய்?

நலமாய் வாழ மருந்தின் அவசியமில்லை
மருந்தை விற்க ஆரோகியம் அகற்ற வேண்டும்
உணவும் ஒழுக்கமும் பழைய பஞ்சாங்கம்
என்று திணிக்க நீயும் சரிந்தாய்

உறைவிடம் அமைக்க ஆற்றுமணல் அவசியமில்லை
பைஞ்சுதை விற்க ஒவ்வாத கட்டிட முறை
அக்கட்டிடங்களே வாழ்வின் நோக்கம்
சமூகம் போற்றும் என தவறான சித்தாந்தம்

அமைதிக்கு ஆசைகள் நிறைவேற தேவையில்லை
திணிக்கப்பட்ட தேவையற்ற ஆசைகளை வேரறுக்க பழகு
ஆசையின் ஊற்றை உணர்ந்ததுமே, உன்னை நீ கேட்க வேண்டியது,
இந்த ஆசை உன்னுடையது தானா?
Posted on by Hari