மனச்சலனம் குற்றவுணர்ச்சி அவமானம் மேலோங்க
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!
இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!
மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது
இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!
வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே
மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!
இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
Jan 26, 2024
குரு தட்சணை
குருவின் தாட்சண்யம் கிடைக்க
குருவிற்கு தட்சணை தரவேண்டும்
ஆர்வமும் ஆவலும் அவிந்த வேட்கையும்
பொறுமையும் அடக்கமும் நிறைந்த பணிவும்
இத்தட்சணைக்கு இணங்காத குருவும் இல்லை
இம்மாணவனுக்கு விளங்காத பாடமும் இல்லை
குருவிற்கு தட்சணை தரவேண்டும்
ஆர்வமும் ஆவலும் அவிந்த வேட்கையும்
பொறுமையும் அடக்கமும் நிறைந்த பணிவும்
இத்தட்சணைக்கு இணங்காத குருவும் இல்லை
இம்மாணவனுக்கு விளங்காத பாடமும் இல்லை
Jan 2, 2024
தன்னை அறிய முயன்றால்
தன்னை அறியும் முயற்சியில்..
மன குறைகள் கண்டறிந்து உதிருங்கள்
மன நிறைவு பல அனுபவியங்கள்
உணர்வொடுக்கம் வாய்க்க வாய்ப்புள்ளது
அங்ஙனமே வாய்த்தால்..
உடலியக்கம் சீர்படும்
உயிராற்றல் மேம்படும்
ஞானமும் விரிய வாய்ப்புண்டு
அங்ஙனமே விரிந்தால்..
உள்ளுணர்வு பொய்யாது
ஆன்ம கூற்று தெளிவாய் விளங்கும்
இறையாற்றலும் உணர்ந்தூறலாம்
மன குறைகள் கண்டறிந்து உதிருங்கள்
மன நிறைவு பல அனுபவியங்கள்
உணர்வொடுக்கம் வாய்க்க வாய்ப்புள்ளது
அங்ஙனமே வாய்த்தால்..
உடலியக்கம் சீர்படும்
உயிராற்றல் மேம்படும்
ஞானமும் விரிய வாய்ப்புண்டு
அங்ஙனமே விரிந்தால்..
உள்ளுணர்வு பொய்யாது
ஆன்ம கூற்று தெளிவாய் விளங்கும்
இறையாற்றலும் உணர்ந்தூறலாம்
Subscribe to:
Comments (Atom)