Dec 23, 2020

சுதந்திரம் என்பது யாதெனின்

என்குணத்தான் இறைவன் முழு சுதந்திரன்!
முழு சுதந்திரம் என்பது யாதெனின்;

காணொன்ன வற்றின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை
இதுவல்லது அதுவென்ற மட உகப்பிலிருந்து விடுதலை 
விருப்பு வெறுப்பு அவாவிலிருந்து விடுதலை
எவரும் எவ்வுணர்ச்சியும் தூண்டொன்னா விடுதலை

பிணிநெருங்கா ருசிஊறா பெருமையுறா விடுதலை
தான் தூண்டா பசி என்றும் நெருங்கா விடுதலை
அனுமதியின்றி ஜீவ விரயத்திலிருந்து விடுதலை
தன் ஆணையின்றி உடலை உயிர் பிரியா விடுதலை

இவையின்றி நான் சுதந்திரன் என்று முழங்கலாகுமோ?

சட்ட திட்டங்கள் சீண்டா விடுதலை
பாசபிணைப்பில் ஒடுங்கா விடுதலை
மன சுருள்கள் சுருக்கா விடுதலை
உடல் வரம்பு இருக்கா விடுதலை
உடலை பிரிந்த உயிருக்கே உரிய விடுதலை
உயிர் நிலையில் வாழ்வோர் மட்டும் உணர்ந்த விடுதலை

இவ்விடுதலை கண்டோரை கண்டால் அறிவீர்,
சுதந்திரம் ஒன்றே அர்த்தமுள்ள நாட்டம்!
Posted on by Hari

Nov 24, 2020

ஆறாதார அடைப்பு

வாழ்வாதாரம் தேடி 
துர்நாற்றம் சூழ்ந்து
பயத்தில் உழலல் 
மூலாதார பூட்டாம்

இன்பம் சிதறி
அருசுவை தவிர்த்து
குற்றவுணர்வும் தாழ்ச்சிகுணமும்
சுவடித்தன அடைப்பாம்

செல்வம் விலக
அழகுரசனை குன்றி
அவமானம் அணுகுதல்
மணிப்பூரக முடிச்சாம் 

சுற்றம் எதிர்க்க
அரவணைப்பு குன்றி
விநயம் சுருங்குதல்
அனாகத அணையாம்

கலாரசனை குன்றிட
நல்லிசை செவிமறுக்க
கலையின்றி வாழ்தல் 
விசுத்தி முறுக்காம்

இறைக்குரல் கேளாமை
உள்ளுணர்வு பொய்த்தல்
நினைத்ததங்கனமே நிறையாவிடில்
ஆக்கினை தாழாம்
Posted on by Hari

Nov 12, 2020

ஹைக்கூ

ருசிக்க மறந்தவன்!! 
செல் போனில் லாக் ஸ்க்ரீன் வால் பேப்பராக வைத்து மறந்தான்
தன் ரசனையை!

மழை!!
மார்கழியானால் பூமிக்கே ஜலதோஷம் பிடிக்கிறது,
மனிதன் எம்மாத்திரம்!

கனவு பலித்தது!!
இப்படி ஒரு பெண் வேண்டும் என்று
தவம் இருந்தான் ஒரு இளைஞன்.

சில வருடங்களில் கழிந்தது.
இறைவன் இளகினான்! தவம் பலித்தது!
அப்படியே ஒரு பெண் கிடைத்தால்.

அப்பாவென்று கட்டி அணைத்து
முத்தமிட்டாள்!

15 வருட கனவு!!
15 வருட கனவு நினைவானது.
ஜெர்மானிய வாகனம் வாங்கினான்.
பழகிய கனவின் துணை இன்றி,
தூக்கம் இழந்தான்!
Posted on by Hari

Jul 11, 2020

செய்வன திருந்த செய்

my dad is the best!
என்று சொல்ல மகள் தயங்கினால்,
தந்தை என்ற பட்டத்திற்கு
தகுதி அற்றவன் நீ!

எவனோ ஒருவன் அவதூறு பேச,
அதை சொல்ல நீ யார்? என்று
வரிந்து கட்டிய மனைவியின்
குரல் சொல்லும் உன் புருஷ லக்ஷணம்!

உன் உடலில் குருதி சிந்தினால்,
தந்தையின் நெஞ்சில் ரௌத்திரமும்
தாயின் கண்ணில் நாளங்களும்
வெடிக்காவிடில், பூமிக்கே பாரம் நீ!

சிக்கலில் மாட்டி திணறும்
சக ஊழியன், உன்னை கண்டதும்
அப்பாடா! என்று பெருமூச்சு விடாவிடின்,
நீ இருந்து என்ன பயன்?
Posted on by Hari

Jul 10, 2020

வேலை இழந்த ஓட்டுனன்

தானே இயங்கி வாகனம் வந்தது,
வேலை இழந்தான் ஓட்டுனன்.

பழி வாங்காமல் பால் கொடுத்து,
வாழ்வளித்தது வீட்டு மாடு.

நீ வந்த வேலை என்னவென்று 
இப்போதாவது சிந்தி.
Posted on by Hari

Jul 7, 2020

இறை தூதராம் மழலையர்

இறை தூதராம் மழலையர்!
கொண்டு வந்த செய்தியை
சொல்ல தவிக்கும் திணரலே
அடம் அழுகை சிரிப்பு சிணுங்கல்

சொல்லும் யுக்தியை கற்கும் முன்
நம் சித்தாந்தத்தை திணித்து
அவர் மெய்ஞ்ஞானதிற்கு உறையிட்டு
நம்மைப்போல் ஆக்கி மகிழ்கிறோம்

மனம் தளராது மீண்டும் ஓர் தூதனை
நம்மிடம் அனுப்பும் இறைவனுக்கு
இத்தூதர் மீது அவ்வளவு நம்பிக்கையா?
அல்லது நம் மீது அலாதி கருணையா?
Posted on by Hari

Jul 1, 2020

I wish...

I wish everyone can manifest all the wealth they need,
for in it is the manmade bait uncovered

I wish everyone can instantly become everything they aspire,
for in it is the futility of fame soon dodged

I wish everyone can animate all the things they wish for,
for in it is the exhaustion of material crave realized

I wish everyone can fulfill all the sensory needs they crave,
for in it is the insatiable nature of desires exemplified

I wish everyone can assimilate all the knowledge possible,
for in it is the distress of constipated mind cognized

I wish everyone can be as intelligent as the brightest,
for in it is the anguish of the sharpest knife suffered

I wish everyone can be as valorous as an immortal,
for in it is the realization that nothing is worth the fear

I wish everyone can regain the innocence they lost,
for in it is the cradle of mother nature relished to the hilt
Posted on by Hari

Jun 15, 2020

நான் - நின்ற நிலைகள்

பூமி உடல்
அசைவு உடலுக்கு
உழைப்பு உடலுக்கு
சுகம் உடலுக்கு

சந்திரன் மனம்
எண்ணம் மனதிற்கு
கேளிக்கை மனதிற்கு
ஓய்வு மனதிற்கு

சூரியன் உயிர்
உணவு உயிரிற்கு
உறக்கம் உயிரிற்கு
காப்பு உயிரிற்கு

வெளி கோள்கள் அடையாளம்
பண்பு அடையாளத்திற்கு
ஞானம் அடையாளத்திற்கு
ஊக்கம் அடையாளத்திற்கு

உள் கோள்கள் புத்தி
தகவல் புத்திக்கு
கல்வி புத்திக்கு
அறிவு புத்திக்கு

விண்மீன்கள் சித்தம்
தன்னிறைவு சித்தத்திற்கு
சித்துக்கள் சித்தத்திற்கு
பக்தி சித்தத்திற்கு

பால்வெளி பொருள் ஜீவன்
பேரின்பம் ஜீவனுக்கு
வலி ஜீவனுக்கு
சமாதி ஜீவனுக்கு

அருவான வெளி ஆன்மா
ஆனந்தம் ஆன்மாவிற்கு
முக்தி  ஆன்மாவிற்கு
ஈசத்துவம் ஆன்மாவிற்கு
Posted on by Hari

May 29, 2020

காரண காரியங்கள்

அமைதி தேடும் சமூகசேவையும்
வாகனம் வேண்டி பக்தி செலுத்தலும்
நோய் தீர தியானம் செய்தலும்
வீணான செயல்களே!

கண்மூடி பழக்கங்களை கைவிட்டு,
காரண காரியம் அறிந்து முயற்சியுங்கள்!

ஞானம் வேண்டுமாயின் தியானம் ஒன்றே வழி
முக்தி வேண்டுவோர் பக்தி பழகுங்கள்
மனம் அமைதியடைய நன்னெறி பற்றுதல் வேண்டும்
ஆரோக்கியம் தேடி அலைவோர் சுயஒழுக்கம் கொண்டால் போதும்
மதிப்பு போதுமென்றால் சமூக அக்கறை கொள்ளுங்கள்
இன்பத்தில் திளைக்க உடல் வருத்தி உழைத்தல் வேண்டும்

இவை அனைத்தும் வேண்டுமாயின்
அனைத்தையும் கடைபிடித்தல் ஒன்றே வழி!

Posted on by Hari

May 22, 2020

தாய் என்பது உணர்வு

ஊழி இணைத்தது உறவு
அதுவே சமூகத்தின் திறவு

உடலளவில் கூடியது சுற்றம்
பகிர்ந்து வாழ்தல் உற்றம்

எண்ணங்கள் ஒன்றுபட்டால் நட்பு
அன்பிற்கும் அறிவிற்கும் துடுப்பு

உள்ளங்கள் பிணைந்தது குடும்பம்
பிழைபொறுத்து வாழ்ந்தால் சிறக்கும்

தாய் என்பது உணர்வு
உறவென கருதுதல் தவறு

பிறப்பால் அமைவதும் உண்டு
உணர்வால் இணைவதும் உண்டு

பார்வையால் பேசும் மீனன்னை
சிந்தையால் சொல்லும் ஆமைத்தாய்

மனிதனை ஏமாற்றுமோ இயற்கை
உணர்வால் வழிநடத்துவாள் உன் அன்னை

உறங்கி விழிப்பது இறைவனின் பொறுமை
வெளியேறி வீடுதிரும்புதல் அன்னையின் கருணை

Posted on by Hari

May 18, 2020

தன்னை அறிதல்

இனங்களை அறிய பண்பு பிளிறும்
மனதை அறிய அறிவு துளிரும்
உடலை அறிய ஒழுக்கம் மிளிரும்
உள்ளத்தை அறிய அன்பு மலரும்
இறையை உணர அருள் தளிரும்
தன்னை அறிய ஞானம் ஒளிரும்
Posted on by Hari

Apr 29, 2020

கடப்பாயா?

அபிப்ராயங்களை கடந்தால் ஆசைகள் அறியலாம்
ஆசைகளை கடந்தால் மனதை அறியலாம்
மனதை கடந்தால் உடலை அறியலாம்
உடலை கடந்தால் உயிரை அறியலாம்
உயிரை கடந்தால் ஈசனை அறியலாம்
Posted on by Hari

Apr 15, 2020

உன் வாழ்கை! உன் விருப்பம்!

உறக்கத்திற்கு அடிமையாய் இருக்கும் வரை,
ஊக்கம் அடையலாகாது!

இரைக்கு அடிமையாய் இருக்கும் வரை,
இறைநிலை அறியலாகாது!

ருசிக்கு அடிமையாய் இருக்கும் வரை,
ஆரோக்கிய குறைபாட்டில் உழல்வாய்!

காமத்திற்கு அடிமையாய் இருக்கும் வரை,
மனப்போராட்டம் விலகாது!

எதை பற்றுவது எதை விடுவது,
எல்லாம் உன் விருப்பமே!

காரணமும் காரியமும் பின்னி பிணைந்தவை,
பிரித்து சுகிக்கலாகாது!

எழுச்சி காரணம்:
--------------------------
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே!

- உரோம ரிஷி
Posted on by Hari

Mar 9, 2020

இயக்குநீர் போதை

எங்கிருந்தோ ஆட்கொண்ட ஆர்வத்தை தீட்டி
முழு மனத்தோடு முயர்ந்தது கற்று
உடலை வளைத்து உழைப்பை செலுத்தி
பல தோல்விகளை தொய்ந்து கடந்து
வென்றோரை கண்டு ஊக்கம் தேற்றி
வெற்றியின் ஓரிரு துகள்களை ருசித்து
வென்றோன் வலியோன் என பூரித்து
இயக்குநீர் போதையில் உழன்றிருந்தேன்!

சலிப்பு என்ற துடுப்பை நீட்டி
கருணையோடு கரை சேர்த்து
ஆர்வ ஊற்றை கடந்து காட்டி
குழவி வழியே அகந்தை அகற்றி
உம் வெற்றியில் எம் தோல்வியை பூட்டி
ஒளிந்திருந்த அனுபூதியை வெளிப்படுத்தி
களங்கமகற்றி ஈர்த்து அணைக்கும்
உன் குறும்பிற்கும் ஓர் சலிப்பு உண்டோ?
Posted on by Hari

Jan 19, 2020

வார்த்தைகள் வெறும் கற்களே!

விவாதம் சமவாதம்
விசாரணை பேட்டி
விதண்டாவாதம் கேலி
என்று பரிமாறும் கற்களை கொண்டு

இருவரை சுற்றி செவர் எழுப்பினால்,
வார்த்தைகள் தீர்ந்ததும்
பரஸ்பர தகவல் தொடர்பு
மௌனத்தில் முழுமை காணும்!

சிந்திய கற்கள் இடையில்
குவிந்து செவராய் நின்றால்,
கற்கள் தீர்ந்ததும்
நீ யாரோ நான் யாரோ!

பின்குறிப்பு:
வார்த்தைகளில் உண்மையை தேடாதீர்
வார்த்தைக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை.

உண்மை என்பது  உணர்வின் வெளிப்பாடு
கண்களே உணர்வின் ஜன்னல்கள்.

வார்த்தைகளால் முழுதாய் வெளிப்படுவது
பேச்சு திறனும் மொழியின் நிபுணமும்.

Posted on by Hari