Nov 5, 2024

என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான்

என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான்

பசியில் தொலைத்தேன்
பாலருந்தி மீட்டெடுதேன்

அன்பிற்கு அழுது தொலைத்தேன்
கட்டி அணைத்து திரும்ப கொடுத்தாள்

தோல்வியில் தொலைத்தேன்
வெற்றியில் மீட்டேன்

மீட்டது தோற்றவனின் அமைதி
எனதில்லை என்றுணர்ந்தேன்

மதிப்பிற்கு புகழுக்கும் தொலைத்தேன்
வீண்செயல் என்றுணர்ந்தேன்

அழகில் விரைந்து தொலைத்தேன்
பயனில்லை என்றுணர்ந்தேன்

அறிவு ஆற்றல் என தொலைத்தேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

கதை காவியங்களில் தேடினேன்
ஞானியார் சொற்களில் தேடினேன்

தனிமையில் தேடினேன்
என்னுள் தேடினேன்

ஆழ தோண்டி
பேரமைதி மீட்டெடுதேன்

என்னிடம் இருப்பது அமைதி ஒன்று தான்

உயிரற்ற உறவுகளை நீட்டாதீர்
என்னமைதிக்கு அது ஒப்பில்லை

நாணயங்களுக்கு விலைபேசாதீர்
பரிமாற நான் தயாரில்லை

செல்வாக்கால் பறிக்க முடியாது
அமைதி சூக்ஷம பொருள்

மாசற்ற பேதைமை அமைதிக்குலைத்தால்
மன்னித்து மீட்டுக்கொள்வேன்

நிறைந்த பணிவிற்கு
தற்காலிகமாக தள்ளி வெப்பேன்

தூய அன்பிற்கு
எடைக்கு எடை பண்ட மாற்றுவேன்

அனுபூதிக்கும் அருளுக்கும்
கைமாறு கொடுப்பேன்

இறைவனின் ஆசிக்கு
முழுதும் ஆஹுதி அளிப்பேன்
Posted on by Hari

Sep 24, 2024

journey of yin and yang

he and she are different
they seek different things
they emote differently
they appease in different ways

she relishes to allure
for sparkle of attraction in his eye,
she rejoices in hijacking his senses
delights in beset of attention
he entails admiration
yearning for a glimpse of laud,
he tries to impress her
with all his might and frivolous playacts
she longs for care
a man who accepts her silliness
one who cradles her when shaken,
one she can confide in
he covets her respect,
one who let slide her judgements
one who fights his fights
in rooms he is not
she cherishes the bond
his strength and chivalry
and her sense of secureness
knowing he is around to lean on
he hankers her trust
her conviction against all odds
that he’ll upkeep her honor
in all the circumstances
she yearns devotion, he seeks liberation
he and she here is not biological, but psychological
logical frontal-lobe-dominant persona is the he
emotional amygdala-dominant persona is she

experiencing these emotions to the brim,
fills and heals the voids of both the souls
the younger soul either starts devouting the older
or liberates to evolve devoid of the illusory needs

conflict of emotion and logic is resolved
the centripetal electron has spiraled into the proton
the released neutrinos activate the neo cortex
consciousness take control of our choices.

the journey of yin and yang is complete

Posted on by Hari

Sep 23, 2024

உன் மெய் விளங்கும்

அபயம் உணர்ந்து
நிராசை விளங்கி
விநயம் பழகும்
ஜீவனுக்கே சமூகம் இடர்

உடலியக்கம் சீர்பெற்று
உள்ளடக்கம் வாய்க்கப்பெற்று
அறிவு தெளிந்து உலவும்
ஞானியருக்கே மெய் விளங்கும்
Posted on by Hari

Sep 3, 2024

கலையின் தாத்பரியம் என்ன?

காரியம் உடல்கொண்டு செய்யப்படுவது
கருத்து அறிவை கூறு போடுவது
கலை என்பது உணர்வோடு உறவாடுவது
அது மூன்று நிலைகளில் முதிரும்

கலையின் முதல் நிலை
அடிப்படை அறிதல்
அதன் அறிவியல் பயின்று
பழகி படிப்படியாய் தேறுதல்

கலையின் இரண்டாம் நிலை
ஒரு உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துதல்
பாரதி கவிதை போல்
நன்நடிகனின் நடிப்பை போல்

கலையின் முதிர்ந்த நிலை
சுவைப்பவரின் உணர்வை முழுதாய் ஆக்கிரமித்தல்
உள்ளிறங்கி கண் கலக்கும் பாடல் போல்
திண்ணனின் காதல் கதையை போல்

முதிர்ந்த கலை ஆணவம் அழிக்கும்
முதிர்ந்த பின் தானே உதிரும்
கலைவாணியின் அருள் இன்றி முதிராது
நான் அகன்று அவள் செயல்பட திகட்டாது
Posted on by Hari

இயல் இசை நாடகம்

முதிர்ந்த ஆன்மாக்களுக்கு, இயல் ஒன்றே போதும்!
சொல்லும் கருத்தினை சட்டென்று உள்வாங்குவர்.

தளர்ந்த ஆன்மாக்கள் இசைக்கு மயங்குவர்
பலமுறை கேட்டு, ஒத்திசைத்து கருத்தினை கிரஹிப்பார்.

இளைய ஆன்மாக்களுக்கு, மாயை தேவை!
நடனமும் நாடகமும் உணர்வை பெருக்கும்.

அக்கதாப் பாத்திரமாகி, தன்னையே மறப்போர்,
உள்ளிறங்கி கருத்தினை உணர்வர்.

இளைய குழந்தைக்கு அதிக கவனமூட்டும் அன்னை போல்
வாழ்க்கையும் ஏராள நாடகம் இயற்றி,
இளைய ஆன்மாக்களை கரை தேற்றுவதிலே
அதிக நேரமும் சக்தியும் செலவிடும்.

முதிர்ந்த ஆன்மாக்கள் வெகு சிலரே!
"காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" போன்ற ஒரு வாக்கியம் போதும்,
வாழ்கை போக்கையே மாற்றிக்கொள்ள,
இசை இயற்றி நடுத்தர ஆன்மாக்களுக்கு துடுப்பு நீட்ட!
Posted on by Hari

Aug 30, 2024

மெய் சிலிர்த்தது!

சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு?
குரு: அருளின் அருகாமை

சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி?
குரு: அமைதி அடை

சீடன்: முடியவில்லை
குரு: தடுப்பது எது?

சீடன்: __________
குரு: அதில் ஆர்வம் தீட்டு

(சில நாட்கள் பிறகு)

சீடன்: அறிந்து கொண்டேன்.
குரு: அதில் ஆற்றல் பெருக்கு

(சில திங்கள் கடந்து)

சீடன்: ஆற்றல் பெருக்கினேன். பல போட்டிகள் வென்றேன்.
குரு: அறிவு வளர்

சீடன்: எதற்கு?
குரு: ஆற்றல் குன்றும்

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அறிவாளி என்றுணர்ந்தேன்
குரு: அறம் உணர்

சீடன்: அறிவு போதாதா?
குரு: அறிவு பிழைக்கும்

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அறம் உணர்ந்தேனா என்று தெரியவில்லையே?
குரு: இறைத்தேடல் ஊற்றெடுத்ததா?

சீடன்: ஆம்
குரு: அய்யனை தேடு

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அருள் பெற்றேன்
குரு: தெரியும்

சீடன்: எப்படி?
குரு: மெய் சிலிர்த்தது!
Posted on by Hari

Mar 7, 2024

வலி ஒன்றுதான் பலவீனம்

வலி ஒன்றுதான் மனிதனின் பலவீனம்
பசி பிணி வதை மூப்பு யாவும் வெவ்வேறு வகை வலியே
மனவேதனை பயம் ஏமாற்றம் நிராகரிப்பு யாவும் வலியே

வலி தவிர்க்க அனைத்தையும் அடகு வைக்கும் மந்தையில்
எவ்வலியையும் ஏற்க ஏதோ ஒரு காரணம்
கண்டு துணிபவனே முழுமைபெறுகிறான்

அங்கே ஒரு ஏஷுவா
இங்கே ஒரு புத்தர்
எங்கும் பல சித்தர்

அங்கே ஒரு ஹனுமன்
இங்கே ஒரு ஆண்டாள்
என்றோ ஒரு திண்ணன்

எங்கோ ஒரு சேகுவேரா
அன்று இரு மருதர்கள்
இங்கு ஒரு பகத்தும் போஸும்

எங்கோ ஒரு சாக்ரடீஸ்
அன்று ஒரு திருவேங்கடர்
இங்கு ஒரு பாரதி

என்று வீரர்களின் பட்டியல்
வாழையடி வாழையாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும்

சிறு வலிகளுக்கு சிணுங்கும் வேளையில்
இவர்களில் சரித்திரம் அவ்வலி மறக்க செய்தால்
உன் வீரமும் துளிர்விட தொடங்கிவிட்டது
Posted on by Hari

Mar 6, 2024

தியாகமும் தியானமும்

தியாக பாதை
தனது நேரம் பலம் பொருள் செல்வாக்கு மற்றும் உயிராற்றல் போன்றவற்றை மற்ற உயிர்கள் மேம்பட செலவிடுவது.
பயணிக்க நல்லுணர்வு வேண்டும். சகிப்பு வேண்டும்.
தன்னிறைவு வாய்க்கும்.
பொதுநலத்தில் தொடங்கி சுயநலத்தில் முடிவது.

தியான பாதை
பலம் பொருள் செல்வாக்கு துறந்து, தனது நேரத்தையும் உயிராற்றலையும் கொண்டு அகம் புகுந்து பயணிப்பது.
பயணிக்க நல்லறிவு வேண்டும். தொய்வு வேண்டும்.
ஞானம் வாய்க்கும்.
சுயநலத்தில் தொடங்கி பொதுநலத்தில் முடியும்.
Posted on by Hari

Feb 24, 2024

உன்னத நிலை

உடை கழிவு துவைத்தால் விலகும்
உடல் கழிவு நீராட நீங்கும்

மான கழிவு வெற்றியில் மறக்கும்
மன கழிவு உன்மத்தத்தில் தளரும்

உணர்வால் பொய்த்தல் உயிர் பிணியாகும்
குவிந்த கர்மவினை அடுக்குகளின் அறிகுறியாகும்

உணர்வு பொய்யாதிருத்தலே,
ஆன்மீக முன்னேற்றத்தின் அளவுகோல்!

உணர்வு தூய்மையே உன்னத நிலை!
Posted on by Hari

எதற்கு?

அறிவு எதற்கு?
சுழற்சி முறைகளை கண்டு களைய.

துணிவு எதற்கு?
தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க.

அழகு எதற்கு?
அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன்னையும் மறந்து வியக்க.

செல்வ வளம் எதற்கு?
அறிவால் பற்றாக்குறை அறிந்து, துணிவாய் தீர்க்க.

செல்வாக்கு எதற்கு?
நம்பினோரை நல்வழி நடத்த.

சேவைகள் எதற்கு?
பொதுநலம் பேனி, சுயநலம் கடக்க.

நட்ப்பு எதற்கு?
நம்பிக்கை பழக.

காதல் எதற்கு?
கர்வம் தகர்க்க.

மகப்பேறு எதற்கு?
சுயரசனையை கடக்க.
Posted on by Hari

எதற்கு?

ஆடல் பாடல் கேளிக்கையும் எதற்கு?
முன்னும் பின்னும் உலவும் மனத்தை
இங்ஙனம் நிறுத்தி களிப்பதற்கு.

ஆர்வமும் ஈர்ப்பும் கல்வியும் எதற்கு?
பரவிக்கிடக்கும் மனோசக்தியை ஒன்று திரட்டி
ஓரிடத்தில் கவனம் வைத்து பழகுவதற்கு.

முயற்சியும் பயிற்சியும் உழைப்பும் எதற்கு?
நம் நேரத்தையும் கவனத்தையும் கவர்ந்து வீணாக்கும்
செயல்களில் வசப்படாமல் ஒழுக்கம் பயில்வதற்கு.

பூசையும் தொழுகையும் ஆன்மீகமும் எதற்கு?
விருப்பு வெறுப்பு கொண்ட மனம்
தக்கதொரு ஆளுமையை பற்றி நடுநிலை அடைவதற்கு.

தியானமும் தவமும் யோகமும் எதற்கு?
கவனத்தில் நிபுனமும் முயற்சியில் வெற்றியும் பலகண்டு
தானாய் தோன்றும் தொய்வால் மறுபிறப்பு அறுப்பதற்கு.
Posted on by Hari

Feb 7, 2024

எது சைவம்?

அசைவின்றி அமர்கையில்
உள்ளிறங்கும் அமிழ்தை
மட்டும் உண்டு
உலவுபவனே சைவன்
Posted on by Hari

Jan 26, 2024

விடுதலையின் மூன்று நிலைகள்

மனச்சலனம் குற்றவுணர்ச்சி அவமானம் மேலோங்க
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!

இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!

மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது

இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!

வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே

மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!

இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
Posted on by Hari

குரு தட்சணை

குருவின் தாட்சண்யம் கிடைக்க
குருவிற்கு தட்சணை தரவேண்டும்

ஆர்வமும் ஆவலும் அவிந்த வேட்கையும்
பொறுமையும் அடக்கமும் நிறைந்த பணிவும்

இத்தட்சணைக்கு இணங்காத குருவும் இல்லை
இம்மாணவனுக்கு விளங்காத பாடமும் இல்லை
Posted on by Hari

Jan 2, 2024

தன்னை அறிய முயன்றால்

தன்னை அறியும் முயற்சியில்..
மன குறைகள் கண்டறிந்து உதிருங்கள்
மன நிறைவு பல அனுபவியங்கள்
உணர்வொடுக்கம் வாய்க்க வாய்ப்புள்ளது

அங்ஙனமே வாய்த்தால்..
உடலியக்கம் சீர்படும்
உயிராற்றல் மேம்படும்
ஞானமும் விரிய வாய்ப்புண்டு

அங்ஙனமே விரிந்தால்..
உள்ளுணர்வு பொய்யாது
ஆன்ம கூற்று தெளிவாய் விளங்கும்
இறையாற்றலும் உணர்ந்தூறலாம்
Posted on by Hari