Dec 23, 2025

அசரீரி

ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்!

மொழியறியும் வரை உரக்க உரைத்து,
சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும்
ஒரு பேராற்றல்!

மொழி மறந்து உரையாடினால்,
ஓடி வந்து உறவாடும்
பச்சிளம் பிள்ளை!

முடிவெடுக்கும் முன்பே,
முழு விளைவையும்
உணர்த்தவல்ல வல்லபி!

பிற்காலம் பொற்காலம்
என்ற காலக்கோடுகளை
கடந்து வாழும் காளி தேவி!

அக குரல் கேட்டு நடந்தால்,
உணர்வை தூண்டும் விசைகளை
முறியடிக்கும் மூலஸ்த்ரி!

குழப்பம் வருத்தம் சஞ்சலம்
எதையும் அண்டவிடாது, தானே
பொறுப்பேற்கும் பொன்னி அவள்!

கண்ணும் காதும், நாக்கும் மூக்கும்,
உடலும் எண்ணமும், ஓங்கியிருக்க..
கூனி குறுகும் வாலை குமரி!

ஐம்புலனும் ஒடுங்கி, மனம் உறைந்தால்,
விழித்தெழுந்து வழிகாட்டும்
குமர குரு!

தவமுறை தியானமோ, குருவருளோ,
தெய்வ கடாட்சமோ சித்தித்தால்,
உன்னுடன் மட்டும் உரையாடும் அசரீரி!
Posted on by Hari