ஆரோக்கியம் ஆடம்பரம் அல்ல
உடலின் இயற்கை நிலை!
மனதின் போக்கு உடலை வருத்தும்
கர்மம் கரைய தானே மேம்படும்
ஒழுக்கமே ஆரோகியத்தின் திறவுகோல்
அமைதி தேடிசெல்லும் பொருள் அல்ல
மனதின் இயற்கை நிலை!
உணர்ச்சிகளின் கூச்சல் மதி மயக்கும்
மாயை விலக தானே வெளிப்படும்
மன்னிப்பும் நன்றியுணர்வும் வழிவகுக்கும்
ஆனந்தம் அறிய பொக்கிஷம் அல்ல
ஜீவனின் இயற்கை நிலை!
தான் என்று இருப்பவன் அறியலாகாது
ஆணவம் அழிய அனுபவம் வாய்க்கும்
சரணாகதியே பரமானந்தத்தின் பாதை
