Apr 14, 2026

no point in arguing

There is no point in arguing over a fact.
if it matters, fact-check from agreed-upon sources and close the case.
if it doesn't, drop-it, brush-aside and move-on.

There is no point in arguing over the past.
utterly impossible to grasp full perspective of what really happened.
history is susceptible to exagerration, narratives, biases and delusions.

There is no point in arguing over the unprovable absurds.
Personal traits, boasts, claims that can neither be verified;
nor be exhibited nor be experienced by the doubter are not worth pondering.

The only reason to argue is; inquisitive playfulness.
to mull over the details that may help better comprehention;
to trantiently fire-up someone, to bewilder and deliver a delightful surprise.
Posted on by Hari

மேம்பாடு

அயர்வு நீட்டித்தல்..
நினைவுகளை அசைபோடுதல்..
முனைப்பின்றி கனா காண்டல்..
அதிருப்தியாய் மனமலைதல்..
புலன் இன்பம் முன்னிறுத்தல்..
நாட்பட்ட உணர்வு கசிதல்..
தன்னிலைக்கு மற்றோரை சாடல்..
சான்றோர் சொல் புறக்கணித்தல்..
யாவும் சீர்குலைவே!

உடல் பலமேற்றல்..
தேடி துருவி ஆராய்தல்..
வழிமொழியாமல் தகவல் சேர்த்தல்..
பணிவாய் வித்தை பயிலுதல்..
பயின்றதை மடமையுடன் பழகுதல்..
திறன்கொண்டு வளம்சேர்த்தல்..
சொல்லற, அமைதி பழகுதல்..
இக்கணத்தை ரசிக்கும் ஆற்றல்..
யாவும் மேம்பாடே!
Posted on by Hari

Jan 31, 2026

எல்லாம் இன்பமயம்

எல்லாம் இன்பமயம்!
கடமை பொறுப்பு பாத்தியதை,
தடைபடா நேரத்தில், இன்பமாய் இரு!

இன்பத்தின் இறுதியில் வெறுமை ஊற்றுபவை,
இயற்கையின் செயல் அல்ல!
பரிணாம உயர்வை தாமதப்படுத்தும் சவால்கள்.
༺༻

பொருள் தானாய் விளங்காது! தேடி அறியப்படுவது!
எது உன் ஊக்கத்தை தூண்டுகிறதோ,
அங்கு தான் உன் பொருள் உண்டு.

சக்தியும் நேரமும் வளமும்,
தானாய் விரையும் செல்வங்கள்!
சீராய் செலவிட்டு, வைப்பு சேர்த்தலே, பொருளின் தாத்பரியம்.
༺༻

கருத்தால் வரையறுக்க முடியாத ஒன்று அறம்.
சேமித்த வளங்களை எல்லாம்,
கணக்கின்றி மனமொன்றி செலவிட தூண்டும்!

அன்பில் வியப்பில் அக்கரையில்,
சக்தியும் நேரமும் வளமும் செலவிட்டு,
மனம் நெகிழும் செயல் யாவும் அறமாம்.
༺༻
Posted on by Hari

Jan 23, 2026

Graduation

you can't get ride of fear!
fear of fears is yet another fear.

you can't get rid of all desires!
the desire to do so contradicts the strive.

you can't disolve all your pride!
the accompolishment seeds new hubris.


you can watch the ebb and flow of emotions.
uninvolved witnessing is the height of intelligence!

you may recognize a hint of innocence in every being.
after a long phase of emotionless detatchment!

that innocence seeds the ability to care,
protect and even love those beings at times!

when that care graduates to compassion,
you have completed your course on this realm!
Posted on by Hari

Dec 23, 2025

அசரீரி

ஒரு மெல்லிய ஓசையற்ற குரல்!

மொழியறியும் வரை உரக்க உரைத்து,
சொல்லறிந்ததும் உறைந்து கிடைக்கும்
ஒரு பேராற்றல்!

மொழி மறந்து உரையாடினால்,
ஓடி வந்து உறவாடும்
பச்சிளம் பிள்ளை!

முடிவெடுக்கும் முன்பே,
முழு விளைவையும்
உணர்த்தவல்ல வல்லபி!

பிற்காலம் பொற்காலம்
என்ற காலக்கோடுகளை
கடந்து வாழும் காளி தேவி!

அக குரல் கேட்டு நடந்தால்,
உணர்வை தூண்டும் விசைகளை
முறியடிக்கும் மூலஸ்த்ரி!

குழப்பம் வருத்தம் சஞ்சலம்
எதையும் அண்டவிடாது, தானே
பொறுப்பேற்கும் பொன்னி அவள்!

கண்ணும் காதும், நாக்கும் மூக்கும்,
உடலும் எண்ணமும், ஓங்கியிருக்க..
கூனி குறுகும் வாலை குமரி!

ஐம்புலனும் ஒடுங்கி, மனம் உறைந்தால்,
விழித்தெழுந்து வழிகாட்டும்
குமர குரு!

தவமுறை தியானமோ, குருவருளோ,
தெய்வ கடாட்சமோ சித்தித்தால்,
உன்னுடன் மட்டும் உரையாடும் அசரீரி!
Posted on by Hari

Sep 9, 2025

கருத்துணர்வு

என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்..
என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்..
போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தளம்!

ஆசை-அறிவு, பெற்றோர்-பிள்ளை, கணவன்-மனைவி, ஆசான்-கற்பவன்..
போன்ற அனைத்துறவின் முரண்களும்,
கருத்தும் உணர்வும் மோதும் முஷ்டி சண்டையே!

பெருமூளையில் நிலைகொண்டப் பெரியோர்கள்,
சிறுமூலையில் சிக்கியுள்ள சிறியோர்களை,
பொறுத்து பேணுவதே உத்தமம்!

உணர்வு முறியம்வரை.. கருத்தை தவிர்தலும்,
அறிவு விரியும்வரை.. கருத்தை மறைத்தலும்,
அன்பு பெருகினால்.. கருத்தை கைவிடுதலும்,
முதிர்ச்சி!
Posted on by Hari

இல்லம்

உலகில் கள்ளமும் கபடமும் மாச்சரியம் பழகி,
அதிலிருந்து ஓய்வு எடுக்க உறையும் இடமே இல்லம்!

தன்னந்தனியே இருக்கையில், இருக்கும் மனநிலையை,
இமியளவும் மாற்றாத சூழலே இல்லம்!

சோம்பலும் சோகமும் காமமும் கோபமும் ஒளிவின்றி,
தோன்றியதும் வெளிப்பட உகந்த இடமே இல்லம்!

உன்னில் உள்ளதை உள்ளபடியே உலகம் ஏற்றுக்கொள்ளாது.
ஏற்றுக்கொண்ட ஜீவன்கள் மட்டுமே கூடி வாழுமிடம் இல்லம்!
Posted on by Hari

அந்தக்கரணம்

மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு.
சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்..

விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்..
உணர்வு மேலோங்கினால் சுயமும்..
உணர்வற்ற நிலையில் புத்தியும்..
சுயநினைவற்ற உறக்கத்தில் சித்தமும்..

மாறி மாறி மேலோங்கி சுழற்றும்
நிலையே மனநிலை!

விழிப்புணர்வு கவனம் கிரஹிப்பு
மனத்தின் செயற்பாடு.. பிசகினால்..
மருட்சி மயக்கம் மந்த-புத்தி வெளிப்படும்.
சுட்டி தனமும்.. மதிக்கூர்மையும்.. நன்மனத்தின் அறிகுறி.

பொறுப்புணர்வு தன்னம்பிக்கை சுயமதிப்பு
சுயத்தின் செயல்.. அஹங்காரம் மிகுந்தால்..
அகந்தை கர்வம் தற்பெருமை தலைத் தூக்கும்.
ஆணவமும் தேவை.. முனைப்போடு செயல்பட!

ஆராய்தல் ஒப்பீடு மனத்திண்மை
புத்தியின் வெகுமதி. புத்தி கசிந்தால்..
அதீத-சிந்தனை வியாகுலம் குழப்பம் சூழும்.
நுழைபுல புத்தியை.. கட்டுக்குள் அடக்கியவன் புத்தன்.

சித்தத்தின் செயல்பாடு ஆழமானது
கிரஹித்ததை பதித்தலும், உள்ளுணர்வின் ஊற்றும்
சித்தம் செய்யும் செயலே!
மனம் சுயம் புத்தி உள்ளடக்கி, சித்தத்தில் உறைந்தவனே சித்தன்.

மனம் என்ற ஐம்புலனும் ஜட கருவிகள்..
சுவாதீனம் என்பது பரஸ்பர மருட்சி..
புத்தி.. மேம்பட்டதாயினும்.. ஜடப்பொருளே!
சித்தம்.. உறக்கத்திலும் விழித்திருந்து வழிநடத்தும் பேரறிவின் பாலம்.
Posted on by Hari

Sep 6, 2025

ஒப்பீட்டு வழுக்கள்

தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி..
அனுபவம் உணர்வுகள் சாதூரியம்..
சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல!

உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை..
அலட்சியம் அருவருப்பு நிந்தனை..
நிதமும் களைவதுவே மேம்பாடு.

நீ பலசாலி.. இவன் அறிவாளி.. அவள் கனிவானவள்..
என்பவை ஒப்பீட்டு வழுக்கள்.. நிதர்சனம் அல்ல!
உண்மை என்று உள்வாங்கினால்.. உழன்று கொண்டே இருப்பாய்.
Posted on by Hari

Sep 5, 2025

ஏதுமாய் இல்லாதிரு

வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு
நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு
சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு

விளைவு கருதாத் துணிவே துணிவு
தனதாற்றல் மறந்து பணியும் பணிவே பணிவு
தாக்குவதையும் காக்கும் கனிவே கனிவு
Posted on by Hari

Sep 3, 2025

பதவி

பசித்து புசி
தத்துவம் அசி
விழித்து வாசி
Posted on by Hari

Jul 4, 2025

messenger

I question myself so hard,
Thus, I'm not caught off-gaurd.

When i do, i know its the herald,
Sent by the divine lord.
Posted on by Hari

May 22, 2025

தகுந்தவை

வியக்கத் தகுந்தவை?
பேரழகு பேரறிவு பேராற்றல்

வாழ்த்தத் தகுந்தவை?
வேட்கை முயற்சி பணிவு

போற்றத் தகுந்தவை?
நல்லறம் நற்குணம் பரமஞானம்

வழங்கத் தகுந்தவை?
பிராணதானம் பிரணவதானம் ஞானதானம்


பிராணதானம் என்பது?
உயிர்க்கத்தால், உணவளித்தல், நலம் பேணல்

பிரணவதானம் என்றால்?
உணர்வூட்டல், ஊக்கமளித்தல், சூல்காத்தல்

ஞானதானம்?
கலை, வித்தை, மெய்ஞ்ஞானம் பயில்வித்தல்

Posted on by Hari

Apr 5, 2025

என்ன உறவு?

உனக்கும் எனக்கும் என்ன உறவு?
கல்லில் செதுக்குவதும்
கையொப்பம் இடுவதும்
முழுமை தந்ததா?

இப் பொழுது ஒரு உறவை நீட்டு!
அவ் உறவிற்கு உண்மையாய் இரு!
இடம் பொருள் ஏவலுக்கேட்ப,
உறவும் விரிந்து உருமாறட்டும்!

உன் தந்தையென கொள்!
அவையத்து முந்துவதே கடமையெனக் கொள்வேன்.
அறம் உணர்த்துவதும், ஆற்றல் பெருக்குவதும்
எனதன்பின் வெளிப்பாடு

சக உதிரன் என கொள்!
சேட்டைகள் செய்வதும், சினம் கொள்ள வைப்பதும்
எனது பிரத்தியேக உரிமை.
வேறொருவன் அழவைத்தால், அண்ணன் யாரென்று அறிவாய்!

தோழன் என கொள்!
விருப்புகள் பகிர்ந்து, வெறுப்புகள் களைவோம்
பல வருட பிரிவுகளும், ஒரு நொடியில் தகரும்.
நீ இல்லாத அறைகளிலும், உன்பக்கம் நிற்பேன்!

நண்பன் என கொள்!
உன் நம்பிக்கை காப்பது என் உடன்படிக்கை.
உன் உறவுகள் என் உறவுகள்
உன்னை எதிர்த்தேனும், உனைக் காப்பேன்.

கொண்டவனாய் கொண்டால்,
உன் உடமை உரிமையும் காப்பது
எனது சமரசமற்ற கடமை!
பயம் ஆசை ஏக்கம் தவிப்பு களைவேன்

மகனென கொள்!
கொண்ட பொழுதின் பெரிதுவக்கம்
சான்றோர் சபையில் உணர்வாய்!
பிறவிப்பயன் பூரிப்பை உணர்த்திச் செல்வேன்.

தாயாய் கருதிக்கொள்!
போஷித்து ஊட்டமளித்து வளர்ப்பேன்.
உனக்கு முன்பே உன் இடர்களை உணர்வேன்.
தெய்வத்தையும் ஏவி உனைக் காப்பேன்.

குருவெனக் கொண்டால்,
அனைத்துறவின் அத்துமீறலுக்கும் தயாராகிவிடு.
உன் அகம் புகுந்து, குறை களைவதும்,
பண்பாட்டை தகர்ப்பதும், எனக்கிடப்பட்ட கட்டளை!

எவ்வுறவும் நிரந்தரம் அல்ல!
இப்பிறப்பிலோ பிற்பிறப்பிலோ உருமாறி பரிணமிக்கும்.
நிகழ்கால உறவே நிதர்சனம்
அதிலிருந்து உதிரும் உணர்வே நிறைகுடம்.
Posted on by Hari

Nov 5, 2024

என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான்

என்னிடம் இருந்தது அமைதி ஒன்று தான்

பசியில் தொலைத்தேன்
பாலருந்தி மீட்டெடுதேன்

அன்பிற்கு அழுது தொலைத்தேன்
கட்டி அணைத்து திரும்ப கொடுத்தாள்

தோல்வியில் தொலைத்தேன்
வெற்றியில் மீட்டேன்

மீட்டது தோற்றவனின் அமைதி
எனதில்லை என்றுணர்ந்தேன்

மதிப்பிற்கு புகழுக்கும் தொலைத்தேன்
வீண்செயல் என்றுணர்ந்தேன்

அழகில் விரைந்து தொலைத்தேன்
பயனில்லை என்றுணர்ந்தேன்

அறிவு ஆற்றல் என தொலைத்தேன்
எங்கு தேடியும் கிடைக்கவில்லை

கதை காவியங்களில் தேடினேன்
ஞானியார் சொற்களில் தேடினேன்

தனிமையில் தேடினேன்
என்னுள் தேடினேன்

ஆழ தோண்டி
பேரமைதி மீட்டெடுதேன்

என்னிடம் இருப்பது அமைதி ஒன்று தான்

உயிரற்ற உறவுகளை நீட்டாதீர்
என்னமைதிக்கு அது ஒப்பில்லை

நாணயங்களுக்கு விலைபேசாதீர்
பரிமாற நான் தயாரில்லை

செல்வாக்கால் பறிக்க முடியாது
அமைதி சூக்ஷம பொருள்

மாசற்ற பேதைமை அமைதிக்குலைத்தால்
மன்னித்து மீட்டுக்கொள்வேன்

நிறைந்த பணிவிற்கு
தற்காலிகமாக தள்ளி வெப்பேன்

தூய அன்பிற்கு
எடைக்கு எடை பண்ட மாற்றுவேன்

அனுபூதிக்கும் அருளுக்கும்
கைமாறு கொடுப்பேன்

இறைவனின் ஆசிக்கு
முழுதும் ஆஹுதி அளிப்பேன்
Posted on by Hari

Sep 24, 2024

journey of yin and yang

he and she are different
they seek different things
they emote differently
they appease in different ways

she relishes to allure
for sparkle of attraction in his eye,
she rejoices in hijacking his senses
delights in beset of attention
he entails admiration
yearning for a glimpse of laud,
he tries to impress her
with all his might and frivolous playacts
she longs for care
a man who accepts her silliness
one who cradles her when shaken,
one she can confide in
he covets her respect,
one who let slide her judgements
one who fights his fights
in rooms he is not
she cherishes the bond
his strength and chivalry
and her sense of secureness
knowing he is around to lean on
he hankers her trust
her conviction against all odds
that he’ll upkeep her honor
in all the circumstances
she yearns devotion, he seeks liberation
he and she here is not biological, but psychological
logical frontal-lobe-dominant persona is the he
emotional amygdala-dominant persona is she

experiencing these emotions to the brim,
fills and heals the voids of both the souls
the younger soul either starts devouting the older
or liberates to evolve devoid of the illusory needs

conflict of emotion and logic is resolved
the centripetal electron has spiraled into the proton
the released neutrinos activate the neo cortex
consciousness take control of our choices.

the journey of yin and yang is complete

Posted on by Hari

Sep 23, 2024

உன் மெய் விளங்கும்

அபயம் உணர்ந்து
நிராசை விளங்கி
விநயம் பழகும்
ஜீவனுக்கே சமூகம் இடர்

உடலியக்கம் சீர்பெற்று
உள்ளடக்கம் வாய்க்கப்பெற்று
அறிவு தெளிந்து உலவும்
ஞானியருக்கே மெய் விளங்கும்
Posted on by Hari

Sep 3, 2024

கலையின் தாத்பரியம் என்ன?

காரியம் உடல்கொண்டு செய்யப்படுவது
கருத்து அறிவை கூறு போடுவது
கலை என்பது உணர்வோடு உறவாடுவது
அது மூன்று நிலைகளில் முதிரும்

கலையின் முதல் நிலை
அடிப்படை அறிதல்
அதன் அறிவியல் பயின்று
பழகி படிப்படியாய் தேறுதல்

கலையின் இரண்டாம் நிலை
ஒரு உணர்வை சிறப்பாக வெளிப்படுத்துதல்
பாரதி கவிதை போல்
நன்நடிகனின் நடிப்பை போல்

கலையின் முதிர்ந்த நிலை
சுவைப்பவரின் உணர்வை முழுதாய் ஆக்கிரமித்தல்
உள்ளிறங்கி கண் கலக்கும் பாடல் போல்
திண்ணனின் காதல் கதையை போல்

முதிர்ந்த கலை ஆணவம் அழிக்கும்
முதிர்ந்த பின் தானே உதிரும்
கலைவாணியின் அருள் இன்றி முதிராது
நான் அகன்று அவள் செயல்பட திகட்டாது
Posted on by Hari

இயல் இசை நாடகம்

முதிர்ந்த ஆன்மாக்களுக்கு, இயல் ஒன்றே போதும்!
சொல்லும் கருத்தினை சட்டென்று உள்வாங்குவர்.

தளர்ந்த ஆன்மாக்கள் இசைக்கு மயங்குவர்
பலமுறை கேட்டு, ஒத்திசைத்து கருத்தினை கிரஹிப்பார்.

இளைய ஆன்மாக்களுக்கு, மாயை தேவை!
நடனமும் நாடகமும் உணர்வை பெருக்கும்.

அக்கதாப் பாத்திரமாகி, தன்னையே மறப்போர்,
உள்ளிறங்கி கருத்தினை உணர்வர்.

இளைய குழந்தைக்கு அதிக கவனமூட்டும் அன்னை போல்
வாழ்க்கையும் ஏராள நாடகம் இயற்றி,
இளைய ஆன்மாக்களை கரை தேற்றுவதிலே
அதிக நேரமும் சக்தியும் செலவிடும்.

முதிர்ந்த ஆன்மாக்கள் வெகு சிலரே!
"காதற்ற ஊசியும் வராது காண் கடைவழிக்கே" போன்ற ஒரு வாக்கியம் போதும்,
வாழ்கை போக்கையே மாற்றிக்கொள்ள,
இசை இயற்றி நடுத்தர ஆன்மாக்களுக்கு துடுப்பு நீட்ட!
Posted on by Hari

Aug 30, 2024

மெய் சிலிர்த்தது!

சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு?
குரு: அருளின் அருகாமை

சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி?
குரு: அமைதி அடை

சீடன்: முடியவில்லை
குரு: தடுப்பது எது?

சீடன்: __________
குரு: அதில் ஆர்வம் தீட்டு

(சில நாட்கள் பிறகு)

சீடன்: அறிந்து கொண்டேன்.
குரு: அதில் ஆற்றல் பெருக்கு

(சில திங்கள் கடந்து)

சீடன்: ஆற்றல் பெருக்கினேன். பல போட்டிகள் வென்றேன்.
குரு: அறிவு வளர்

சீடன்: எதற்கு?
குரு: ஆற்றல் குன்றும்

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அறிவாளி என்றுணர்ந்தேன்
குரு: அறம் உணர்

சீடன்: அறிவு போதாதா?
குரு: அறிவு பிழைக்கும்

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அறம் உணர்ந்தேனா என்று தெரியவில்லையே?
குரு: இறைத்தேடல் ஊற்றெடுத்ததா?

சீடன்: ஆம்
குரு: அய்யனை தேடு

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அருள் பெற்றேன்
குரு: தெரியும்

சீடன்: எப்படி?
குரு: மெய் சிலிர்த்தது!
Posted on by Hari

Mar 7, 2024

வலி ஒன்றுதான் பலவீனம்

வலி ஒன்றுதான் மனிதனின் பலவீனம்
பசி பிணி வதை மூப்பு யாவும் வெவ்வேறு வகை வலியே
மனவேதனை பயம் ஏமாற்றம் நிராகரிப்பு யாவும் வலியே

வலி தவிர்க்க அனைத்தையும் அடகு வைக்கும் மந்தையில்
எவ்வலியையும் ஏற்க ஏதோ ஒரு காரணம்
கண்டு துணிபவனே முழுமைபெறுகிறான்

அங்கே ஒரு ஏஷுவா
இங்கே ஒரு புத்தர்
எங்கும் பல சித்தர்

அங்கே ஒரு ஹனுமன்
இங்கே ஒரு ஆண்டாள்
என்றோ ஒரு திண்ணன்

எங்கோ ஒரு சேகுவேரா
அன்று இரு மருதர்கள்
இங்கு ஒரு பகத்தும் போஸும்

எங்கோ ஒரு சாக்ரடீஸ்
அன்று ஒரு திருவேங்கடர்
இங்கு ஒரு பாரதி

என்று வீரர்களின் பட்டியல்
வாழையடி வாழையாய்
தொடர்ந்து கொண்டே இருக்கும்

சிறு வலிகளுக்கு சிணுங்கும் வேளையில்
இவர்களில் சரித்திரம் அவ்வலி மறக்க செய்தால்
உன் வீரமும் துளிர்விட தொடங்கிவிட்டது
Posted on by Hari

Mar 6, 2024

தியாகமும் தியானமும்

தியாக பாதை
தனது நேரம் பலம் பொருள் செல்வாக்கு மற்றும் உயிராற்றல் போன்றவற்றை மற்ற உயிர்கள் மேம்பட செலவிடுவது.
பயணிக்க நல்லுணர்வு வேண்டும். சகிப்பு வேண்டும்.
தன்னிறைவு வாய்க்கும்.
பொதுநலத்தில் தொடங்கி சுயநலத்தில் முடிவது.

தியான பாதை
பலம் பொருள் செல்வாக்கு துறந்து, தனது நேரத்தையும் உயிராற்றலையும் கொண்டு அகம் புகுந்து பயணிப்பது.
பயணிக்க நல்லறிவு வேண்டும். தொய்வு வேண்டும்.
ஞானம் வாய்க்கும்.
சுயநலத்தில் தொடங்கி பொதுநலத்தில் முடியும்.
Posted on by Hari

Feb 24, 2024

உன்னத நிலை

உடை கழிவு துவைத்தால் விலகும்
உடல் கழிவு நீராட நீங்கும்

மான கழிவு வெற்றியில் மறக்கும்
மன கழிவு உன்மத்தத்தில் தளரும்

உணர்வால் பொய்த்தல் உயிர் பிணியாகும்
குவிந்த கர்மவினை அடுக்குகளின் அறிகுறியாகும்

உணர்வு பொய்யாதிருத்தலே,
ஆன்மீக முன்னேற்றத்தின் அளவுகோல்!

உணர்வு தூய்மையே உன்னத நிலை!
Posted on by Hari

எதற்கு?

அறிவு எதற்கு?
சுழற்சி முறைகளை கண்டு களைய.

துணிவு எதற்கு?
தற்காப்பை தற்காலிகமாக தள்ளி வைக்க.

அழகு எதற்கு?
அறிவிழந்து துணிவ்வொடுங்கி தன்னையும் மறந்து வியக்க.

செல்வ வளம் எதற்கு?
அறிவால் பற்றாக்குறை அறிந்து, துணிவாய் தீர்க்க.

செல்வாக்கு எதற்கு?
நம்பினோரை நல்வழி நடத்த.

சேவைகள் எதற்கு?
பொதுநலம் பேனி, சுயநலம் கடக்க.

நட்ப்பு எதற்கு?
நம்பிக்கை பழக.

காதல் எதற்கு?
கர்வம் தகர்க்க.

மகப்பேறு எதற்கு?
சுயரசனையை கடக்க.
Posted on by Hari

எதற்கு?

ஆடல் பாடல் கேளிக்கையும் எதற்கு?
முன்னும் பின்னும் உலவும் மனத்தை
இங்ஙனம் நிறுத்தி களிப்பதற்கு.

ஆர்வமும் ஈர்ப்பும் கல்வியும் எதற்கு?
பரவிக்கிடக்கும் மனோசக்தியை ஒன்று திரட்டி
ஓரிடத்தில் கவனம் வைத்து பழகுவதற்கு.

முயற்சியும் பயிற்சியும் உழைப்பும் எதற்கு?
நம் நேரத்தையும் கவனத்தையும் கவர்ந்து வீணாக்கும்
செயல்களில் வசப்படாமல் ஒழுக்கம் பயில்வதற்கு.

பூசையும் தொழுகையும் ஆன்மீகமும் எதற்கு?
விருப்பு வெறுப்பு கொண்ட மனம்
தக்கதொரு ஆளுமையை பற்றி நடுநிலை அடைவதற்கு.

தியானமும் தவமும் யோகமும் எதற்கு?
கவனத்தில் நிபுனமும் முயற்சியில் வெற்றியும் பலகண்டு
தானாய் தோன்றும் தொய்வால் மறுபிறப்பு அறுப்பதற்கு.
Posted on by Hari

Feb 7, 2024

எது சைவம்?

அசைவின்றி அமர்கையில்
உள்ளிறங்கும் அமிழ்தை
மட்டும் உண்டு
உலவுபவனே சைவன்
Posted on by Hari

Jan 26, 2024

விடுதலையின் மூன்று நிலைகள்

மனச்சலனம் குற்றவுணர்ச்சி அவமானம் மேலோங்க
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!

இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!

மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது

இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!

வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே

மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!

இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
Posted on by Hari

குரு தட்சணை

குருவின் தாட்சண்யம் கிடைக்க
குருவிற்கு தட்சணை தரவேண்டும்

ஆர்வமும் ஆவலும் அவிந்த வேட்கையும்
பொறுமையும் அடக்கமும் நிறைந்த பணிவும்

இத்தட்சணைக்கு இணங்காத குருவும் இல்லை
இம்மாணவனுக்கு விளங்காத பாடமும் இல்லை
Posted on by Hari

Jan 2, 2024

தன்னை அறிய முயன்றால்

தன்னை அறியும் முயற்சியில்..
மன குறைகள் கண்டறிந்து உதிருங்கள்
மன நிறைவு பல அனுபவியங்கள்
உணர்வொடுக்கம் வாய்க்க வாய்ப்புள்ளது

அங்ஙனமே வாய்த்தால்..
உடலியக்கம் சீர்படும்
உயிராற்றல் மேம்படும்
ஞானமும் விரிய வாய்ப்புண்டு

அங்ஙனமே விரிந்தால்..
உள்ளுணர்வு பொய்யாது
ஆன்ம கூற்று தெளிவாய் விளங்கும்
இறையாற்றலும் உணர்ந்தூறலாம்
Posted on by Hari

Dec 13, 2023

பஞ்ச பூத நினைவாற்றல்

நினைவாற்றல் மூளையில் மட்டும் இல்லை!
உடலெங்கும் பரவி கிடக்கிறது.
நீர் நிலம் தீ காற்று ஆகாயம் என
பஞ்ச பூதத்தில் நிலைகொண்டுள்ளது

கற்றது கண்டது கேட்டது
புரிதல் உணர்ந்தவை நினைவுகள்
விருப்பு வெறுப்பு வன்மம்
இவை யாவும் தேங்கிருப்பது நீரில்

நம் முன்னோர் சேமித்த அறிவு
காலாவதியானதை கழற்றியும்
பயனலுள்ளதை பாதுகாத்தும்
மரபணுவின் கூறாய் மண்ணில் தெரியும்

உணர்வோட்டத்தில் வெப்பமேறி
உயிர் ஆவி மேலோங்க வெளிப்படும்
உக்கிரமும் வக்கிரமும் சினமும் சீற்றமும்
உடலிலுள்ள உஷ்ணத்தில் ஒடுங்கியுள்ளது

இப்புவியின் ரகசியங்கள்
சூரிய சந்திர ஆட்டத்தின் விளைவும்
பஞ்ச கிரஹங்களின் விசையும்
வியாழன் வழங்கிய காற்றில் உள்ளது

அகிலத்தின் இயக்கம்
கர்மவினை பெட்டகம்
மாசற்ற ஆன்ம உலகம்
ஆகாய பூதத்தில் நிலைகொண்டுள்ளது

ஓட்டம் அடங்கி உள்முகம் பார்த்தால்.. நீர் நினைவுகள் தெளியும்!
காமம் கடந்து விந்து கட்டினால்.. நிலம் ஒடுங்கி மரபணு மாறும்!
உணர்வுகள் சீண்டா புத்தநிலையில்.. தீயின் தாக்கம் அண்டாது!
உடலை கடந்து உயிர் வியாபித்தால்.. காற்று பூதம் கைவல்யமாகும்!

கர்மா வினை முழுதும் கரைந்தால்
ஆகாய ஏடுகள் கேட்டுணரலாம்!
இறையருளும் சித்தராசியும் பெற்றால்
தக்கதொரு அறிவை ஆகாயத்தில் பதிவிடலாம்!

Posted on by Hari

Nov 19, 2023

நவகிரஹ வழிபாடு

கிழக்கு நோக்கி
உயிரூற்றும் சூரியன்
அறிவூற்றும் புதன்
உணவூற்றும் சுக்கிரன்

தெற்க்கை நோக்கி
வீரியம் சுரக்கும் அங்காரன்
கொடுத்து கர்வமூட்டும் ராகு
கெடுத்து விரக்தியேற்றும் கேது

மேற்க்கே பார்த்து
தர்மம் காட்டும் சனீஸ்வரர்
கர்மம் கரைக்கும் சந்திரன்

வடக்கு நோக்கி
ஞானம் புகட்டும் குரு

என ஒன்பது கோள்களும்
நமது மேம்பாட்டின் அளவுகோல்
நமது போக்கின் வழிகாட்டிகள்
நமது சுயசோதனைச் சாவடிகள்

ஒன்பது முறை சுற்றி வந்து
விண்ணப்பித்து செல்லும் சடங்கல்ல!

ஒவ்வொன்றின் பயனுர்ந்து,
பணிந்து வணங்கி,
நன்றியுரைத்து பாருங்கள்!

சர்வ தோஷங்களும் விலகும்,
அனைத்து பாடங்களும் விளங்கும்!

Posted on by Hari

Nov 2, 2023

என் செயலா?

தக்கத் தகுதியில் நாட்ட மூட்டுவாய்
தகுந்த சூழலில் புகுத்திடுவாய்
புகுந்த செயலில் துணைநின்று வழிநடத்துவாய்

இதில் என் செயலென கூறுவதெங்கனே!
கர்வம் தலை தூக்குவதில்லையே!
Posted on by Hari

Sep 14, 2023

எது உன்னுடையது?

நீ சேர்த்த பொருள் உன்னுடையதல்ல!
பின் ஒரு தேவைக்கு பயன்படும்,
அதுவரை நீயே தக்க ரக்ஷகன்,
என்று உன்னிருப்பு வைத்தது தேவதைகள்.

உன் சுற்றம் நீ சேர்த்ததல்ல!
உன் வினைகளை கரைக்க,
ஒத்த வினையுடையோரை உன்னருகில் சேர்த்து,
வினை கரைந்ததும் விலக்கிடும் ஓர் பிரம்ம சூத்திரம்.

உன் ஆரோக்கியம் நீ சமைத்ததல்ல!
சொல் செயல் சிந்தனை என்ற மும்முனை தாக்குதலும்,
அதனை தீவிரமாக ஏற்றுக்கொண்டதால்
ஏற்பட்ட உணர்வோட்டத்தின் விளைவும்.

இக்கட்டில் சிக்கி தவிக்கும் சாமானியனை
காத்து கரையேற்ற முயலும் துணிவும் உன்னுடையதல்ல!
அச்சாமானியனின் குலம் காக்கும் தெய்வம்
உன்னுள் புகுந்து செயல்படுதலே.

தகுதி மட்டுமே உன்னுடையது!

தேவதைகள் பொருள் காக்க உன்னை தேர்வதும்,
நல்லோரை உன்னருகில் கொண்டு சேர்ப்பதும்,
உடலை உணர்வு தாக்காமல் காப்பதும்,
துணிவு ஈர்ப்பு ஈகை உன்னுள் ஊற்றுவிப்பதும்,
உன் தகுதியை பொறுத்தே!
அத்தகுதியை திரட்டுவது மட்டுமே உன் அறம்.

மனம்போல் வாழ்!
சான்றோன் மனம் கோணாமல் வாழ்!
இறைவன் முன் தலைகுனிவு ஏற்படுத்தும் செயல்களை தவிர்.
நிமிர்ந்து நட! நேர்கொண்டு பார்!

உன் தகுதியை அளக்க தகுந்தோரை மட்டும் வணங்கு,
அவர் கருத்திற்கு மட்டும் செவி சாய்!
தனது விருப்பத்தை உன்மேல் திணித்து தவிக்கும் சாமானியரை,
மன்னித்து பழகு! முன்வினையை தீர்க்க வந்தோர் என ஏற்று ஒழுகு!
Posted on by Hari

May 5, 2023

you are not free..

you are not free..
your guardians guard you
your caretakers feed you
your teachers mould you

you are not free..
you care to impress
you desist to express
you clench and depress

you are not free..
you strive to explain
you shrive to disdain
you thrive to disguise

you are not free..
you work to earn
you play their game
you are not the same

you are not free..
you wallow in attention
you swallow the affront
you borrow their dreams

you are not free..
you've earned enough
you've lost your virile
you're adrift from purpose

you are not free..
you want to be someone else
you want to be somewhere else
you want something else

you are not free..
they can scare you
a lot can lure you
the past still scar you

you are not free..
you seek revenge
you lack courage
you yearn homage

you are not free..
you want to be solaced
you cling to your shackles
you blame every thing else

you are not free..
you're contemptous
you're judgemental
despicably sanctimonious

you are not free..
you are conditioned not to be
you may rebel to be free
that rebellion ties you back to the tree

you are not free..
you don't recognize the free
you can't accept the free
you heckle them free

you are not free..
stop the blame
seek the free
find your thee
Posted on by Hari

Apr 18, 2023

ஃப்ரெண்ட்

ரசனையில் ஒன்றுபட்டோர் தோழன் தோழி
இலக்கால் ஒன்றுபட்டோர் சகா சகி
தனித்தன்மையால் ஈர்க்கப்ப பட்டவர் சிநேகிதன் சிநேகிதி
நம்பிக்கையின் மூலதனத்தில் இணைந்தவன் நண்பன்

ஆயிரம் ஆதாரங்கள் முன்வைத்தாலும்
மனம் ஏற்க மறுக்கும் நம்பிக்கையே நட்பு
பெண்ணுக்கு கற்பை போல்
ஆணுக்கு நட்பு பிரத்தியேகம்
Posted on by Hari

Apr 13, 2023

விதி மதி கதி பதி

விதி பிடியில் இருகச் சிக்கிய தரித்திரர்கள்
மதிகொண்டு முன்னேற முயலும் மனிதர்கள்
கதிகண்டு பரியேரும் யோக்கியர்கள்
பதிகண்டு லயித்திருக்கும் பாக்கியர்கள்

என ஆனைவரும் கூடி வாழும் இவ்வுலகில்
சதி செய்து விதி வென்றோர் யாரும் இல்லை!
மதியினால் கதி கண்டோர் யாரும் இல்லை!
கதி மட்டுமே கொண்டு பதி கண்டொர் யாரும் இல்லை!
Posted on by Hari

Feb 19, 2023

இறைவா போற்றி

இறைவா போற்றி!
ஜோதியாய் நின்று எம்மை அசைக்கும் அருளே போற்றி
அசைவதற்கு நீ அளித்த கதியே போற்றி
உனதாற்றல் உணர்விக்கும் ஜீவனே போற்றி
உன்னை உணர வழிவகுக்கும் உயிரே போற்றி
உன்னை அறிய நீ அளித்த உடலே போற்றி
உடலில் நீ கொடுத்த பலமே போற்றி, மனத் திடமே போற்றி
ஓயாமல் ஊக்குவிக்கும் உன் விசையே போற்றி

செல்வங்கள் கொடுத்து நிறைவை அளித்தாய் நின் தயவே வாழ்க
இன்பங்கள் காட்டி களங்கங்கள் களைத்தாய் நின் பரிவே வாழ்க
மகிழ்வை ஊட்டி மனதை நிறைந்தாய் நின் தாய்மை வாழ்க
ஆனந்தம் அளித்து முழுமை கொடுத்தாய் நின் கருணை வாழ்க

மாயை விளக்கி தெளிவை அளித்த குருவே சரணம்
அறிவை தீட்டி ஞானம் புகுத்தும் குருவே சரணம்
ஞானம் காட்டும் பாதையில் நிந்தன் பாதம் சரணம்
இறைவா சரணம்
சரணம் சரணம்
Posted on by Hari

Dec 19, 2022

என் முதல் தோழி

நான் ரசித்த முதல் முகம் நீ
என் முதல் தோழி நீ

நான் கட்டிய செங்கல் வீடு உன்னோடு
நீ சமைத்த மண்ணுனவு என்னோடு

சீப்பால் பாதம் வருடி விளையாடி மகிழ்ந்தோம்
ஆறு குளங்களில் குதித்தாடி குளித்தோம்

பாண்டி தாயம் கல்லாங்கா பயில்வித்தாய்
சிட்னி ஷெல்டன் ராபர்ட் கியோசாகியும் பரிட்சயம் செய்தாய்

உள்முக சிந்தையுடன் உம்மென்று நான்
உற்சாக கலகலப்பில் சகவாசப்பிரியை நீ

வேறு யாரும் காணாத என்னை கண்டவள் நீ
உன் உக்கிரத்தின் தாக்கம் உணர்ந்தவன் நான்

என் நண்பர்களை அதட்டி மிரட்டுவாய்
உன் தோழிகளும் என் தமக்கையர்

உன் திருமணத்தில் நான் கலங்கினேன்
என் புறப்பாட்டில் நீ கதறினாய்

என் மகளாய் மீண்டும் பிறந்தாய்
உன் மகனாய் எனையும் ஈன்றாய்

நீ வளர்த்த முதல் மகன் நான்
என் பிரத்யேக யசோதை நீ
Posted on by Hari

Dec 16, 2022

மழலை மகனின் கற்பிப்பு

சனி புதன் விடியல் பொழுதில்
எள்ளெண்ணை தேய்த்து
108 வர்மா புள்ளிகளையும் இயக்கி
சியக்காய் கடலைமாவு தேய்த்து
இரண்டு வாளி கொதிக்கும் நீரில் நீராட்டிட..

அவன் சக்திக்கு இயன்றவரை தனது பிஞ்சு கைகளால் தடுத்தும் மழலை கூவல் கூவியும் விலகி ஓட போராடுவான். கண்களில் கண் வைத்து கெஞ்சியும் பார்ப்பான். அனைத்தும் முடிந்து வெளியேறி தலை துவட்டிட கட்டி அணைத்து கொஞ்சிடுவான்.

பாடம் 1: அவன் வெறுப்பது அந்நிகழ்வை மட்டுமே. நிகழ்த்துபவரை அல்ல


தொலைக்காட்சியை எவ்வளவு வியந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாலும்,
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.

பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே

நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.
Posted on by Hari

Jun 16, 2022

நிலையற்றவற்றில் நாட்டம்.. நிலையான வாழ்வா?

நிலையற்றவற்றில் நாட்டம் வைத்து
நிலையாக வாழ நினைக்கும் மாக்களே

ஒரு நொடியில் தலைகீழாக மாறக்கூடிய அழகு செல்வம் புகழ்
மீது நாட்டம் ஒரே நொடியில் மறக்கடிக்கும்

திறமை ஆற்றல் அறிவு நாட்டம் கொண்டோர்
பல வருடங்கள் நினைவில் வாழ்வர்

சமூக சீர்பாட்டில் நாட்டம் கொண்டோர்
தசாப்தங்கள் நினைவில் நிற்பார்

மனிதகுலம் இயற்க்கை மேம்பாட்டில் நாட்டம்
நூற்றாண்டுகள் போற்றப்படுவர்

இறையடி பற்றி அவன்சரண் புகுந்தோர்
பொற்காலம் மக்களால் வணங்கப்படுவர்

மெய்ஞ்ஞானம் ஊற்றினால் இயற்கையின் இயக்கத்தில் நாட்டம் கொண்டோர்
மரணமில்லா பெருவாழ்வு என்ற நிலையான வாழ்வை பெறுவர்
Posted on by Hari

May 23, 2022

இருள்..அருள்

இருள் பொறுக்க மருள் தந்தான்
மருள் நீக்கின் தெருள் தருவான்
தெருள் கொண்டு அருள் செய்க!
Posted on by Hari

May 19, 2022

விளைநிலம் நீர் எரிபொருள் மின்சாரம்

இயற்கையை கசக்கி பிழிந்தெடுக்கும் சாறு,
விளைநிலம் நீர் எரிபொருள் மின்சாரம்.

அத்யாவசியம் ஆடம்பரம் கேளிக்கை 
என பயன்பாடு எதுவாயினும்,
இயற்க்கை அன்னையின் உதிரம் 
உறிஞ்சும் அட்டை பூச்சிகள் நாம்.

தேவையின் தெளிவின்றி மிஞ்சி பயன்படுத்தும்போது,
குருதி ருசி ரசித்து சுகிக்கும் அரக்கனாகிறோம். 
வீணாவதை நிறுத்த சிந்தை சாய்க்காதவன்
அன்னையின் துகிலுரிப்பை அலட்சிய படுத்தும் ஈனப்பிறவி.
Posted on by Hari

Apr 5, 2022

உன் விருப்பும் வெறுப்பும் உன் மீது மட்டுமே!

உன் விருப்பம் உன் மீது மட்டுமே!
"அவரை எனக்கு பிடிக்கும்" என்பது மேலோட்ட கருத்து.
அதன் பின் ஒளிந்திருக்கும் உண்மை யாதெனின்,
உன் விருப்பு அவர் பார்வையில் உள்ள நீ
உன்னை பற்றி அவரது அபிப்ராயம்,
உனது சுய கருத்தை விட அது நன்றாக உள்ளது.

உன் வெறுப்பும் உன்மீது மட்டுமே!
நீ ஏற்க மறுக்கும் மனிதரின் பார்வையில் உள்ள நீ!
உனது பலவீனங்களை எட்டி பார்க்கும் அவரது பார்வை,
நீ அசைபோட மறுக்கும் உன் குறைகளை அம்பலமாக்கியது.
அதை தவிர்த்து தன்மானத்தை தக்கவைக்க
போராடும் மற்றொரு முயற்சியே உனது வெறுப்பு

உன் விருப்பும் வெறுப்பும் உன் மீது மட்டுமே!
Posted on by Hari

Feb 6, 2022

கயிறிழுப்பு போட்டி

ஈசனுக்கும் நீசனுக்கும் இடையே
கயிறிழுப்பு போட்டியில் சிக்கியவன் மனுசன்

சித்தம் சிவம் ஆனால் ஈசன்
செத்து சைவம் ஆனால் நீசன்

ஈசன் கயிற்றை இழுப்பதே இல்லை
நீசன் இழுப்போ ஓய்வதையே இல்லை

ஈசன் ஏன் இழுப்பதில்லை என்று கோவிக்கும் மழலையரே!
அது உன் தனிமனித சுதந்திரத்திற்கு அவன் தரும் மதிப்பு.

ஈசனின் இழுப்பை தாங்கும் சக்தியும் நமக்கில்லை!
எத்தருணத்திலும் அவன் கயிற்றை கைவிடுவதும் இல்லை.

நீசன் வென்றாலும் ஆட்டம் தொடரும்!
ஈசனிடமிருந்து வெகு தொலைவில், நீசனின் அடிமையாக!

நீசனின் இழுப்பை மீறி நீந்தினால் ஈசனை நெருங்கலாம்
நெருங்க நெருங்க நீசன் வலுவிழப்பான்

ஈசன் வென்றால் ஆட்டம் முடிந்தது!
ஏனெனில் நீயும் ஈசனாயிருப்பாய்!
Posted on by Hari

Feb 1, 2022

வழிபாடு

கண்ணீர் வழிய உருகி இசைந்து பாடுவதே.. உண்மையான வழிபாடு.

வழிபாடு மூன்று வகைப்படும்;

1.) தெய்வ வழிபாடு
சரியை - வழிபாடு ஸ்தலங்களுக்கு செல்வது, பூஜைகள் பல செய்து, நம்மை சுற்றி, நமக்கு வெளியே உள்ள ஆற்றல்களை போற்றி பாடுவது.

2.) கடவுள் வழிபாடு
கிரியை - இவ்வுடல் மனம் இயக்கத்தை ஆராய்ந்து, நம்முள் இயங்கும் ஆற்றலை வியந்து, தன்னை அறிந்து தெளிதல்.

3.) இறை வழிபாடு
யோகம் - இவ்வியக்கத்திற்கெல்லாம் மூல கர்த்தாவாகிய இறையை உணர்ந்தறிந்து, அதனோடு ஐக்கியமாகும் முயற்சி.

இதில் எதுவாயினும்; கண் கலங்காவிடில், தொண்டை வரண்டாவிடில் - வழிபாடு முழுமை பெறவில்லை. தொடர்ந்து முயற்சியுங்கள்.

இம்மூன்றில் ஏதேனும் ஒரு வழிபாட்டிற்கு வழி காட்டுபவர் குரு.

குருவிடம் செலுத்த வேண்டியது மதிப்பு, மரியாதை, நன்றி, நம்பிக்கை, விசுவாசம், சமர்ப்பணம். குரு வழிபாடு என்று மனிதரை வழிபடுவது மூடத்தனம். உண்மை குரு ஒருநாளும் இதற்க்கு இடம் கொடுக்க மாட்டார்.
Posted on by Hari

Jan 30, 2022

அறம், பொருள், இன்பம்

நிகழ்கால சுகானுபவம் இன்பம்
இறந்தகால பாடம் புரிந்து வாழ்வின் பாதை அமைத்தல் பொருள்
பல பிறவிகள் கற்ற பாடம் சித்தத்திலிருந்து வழி நடத்துவது அறம்
இம்மூன்றும் முழுமை பெற்று பற்றறுத்து இறையடி சேர்வதே வீடு

தர்மம், அர்த்தம், காமம், மோக்ஷம்
என வியாசர் விளக்கியதும்
அறம், பொருள், இன்பம், வீடு
என்று வள்ளுவர் உரைத்ததும் ஒன்றே
Posted on by Hari

Dec 27, 2021

கண்ணாடி

கண்ணாடி இருக்க
கண்நாடி காணான்
கண்நாடி கண்டபின்
கண்ணாடாதிருப்பனே
Posted on by Hari

Dec 11, 2021

எது பெண்ணியம்?

கலையே வா நீ என்றிருக்க கலைவாணி
இலக்கை அடைய முனைவோருக்கு இலக்குமி
பார் வகார தீ என்றுணர்த்தும் பார்வதி
அண்ணாக்கின் மேல் பூரணத்தை காண அன்னபூரணி
ஆன்ம விளக்கிற்கு காயமே திரி என்று காயத்திரி
பூமி மாரி பச்சை நீலம் என அனைத்தையும் அன்னையாய்
வணங்கி வாழும் வாழையடி வாழை மரபில் வந்தோர் நாம்!

மூடகங்கள் பயில்விக்கும் பெண்ணிய கருத்துகளை கேட்டு
முனிவர்கள் வகுத்த கோட்பாட்டை கெக்கலிக்கலாமா?

Posted on by Hari

Dec 5, 2021

செல்வம் ஈர்க்க..

சாரா பிறர்க்கு, தீமை நினைப்பவன்
அற்பத்தனம், மனதில் கொண்டவன்
நன்மை செய்து, பெருமிதம் கொள்பவன்
செல்வ தேவதைகளை ஈர்க்கலாகாது!
Posted on by Hari

Oct 18, 2021

ஆன்+மீகம்

ஆன்மாவை கண்டறிந்து
உறவாடி உள்ளுணர்ந்து
ஆன்மாற்றலை மீகப்படுத்துவது
ஆன்மீகம்!

இவ்வித்தையை அறிந்தோர்
கவனச்சிதறல் அகற்றி
வந்த வேலையை அறிந்து
சரிவர செய்ய சித்தமாய் இருப்பர்

வேலை காலம் வரும் வரை
ஆன்மாவோடு லயித்திருந்து
தக்க சமயத்தில்
செயல் புரிவர்

தடைகள் தானே கரையும்
அவத்தைகள் விலகும்
விருப்பங்கள் நிறைவேறும்
வினைகள் தொற்றாது
Posted on by Hari

Jun 1, 2021

ஆரோக்கியம்

தேவைக்கு மிஞ்சிய பொருள் வளம் ஒரோக்கியம்
பிணி அற்ற அவயவங்கள் ஈரோக்கியாம்
நின்ற மதியெனும் நிம்மதி மூவோக்கியம்
பசி அணுகா உடலியக்கம் நாலோக்கியம்
மூப்பை வென்ற முறியா இளமை ஐயோக்கியம்
எல்லா உயிரையும் இன்புற பேனிக்கும் அருள் ஆரோக்கியம்
Posted on by Hari

Jan 22, 2021

ஞாலத்திருக்கு மூலையில்லை

ஞாலத்திருக்கு மூலையில்லை
ஞானத்திற்கு மொழியில்லை

மொழியும், அதில் இயற்றப்பட்ட திருமறைகளும், 
ஞான கருத்தினை சொரியும் வாக்கியங்களும்  
அதில் அடங்கியிருக்கும் அர்த்தங்களும்
வழிகாட்டிகளே அன்றி வேலியல்ல.

தமிழுக்குள் முடங்கி கிடைக்கும் ஞானத்தை,
உலகிற்கு கொண்டு சேர்ப்போம்
யாம் பெற்ற இன்பம், 
உலகியலீர் யாவர்க்கும் எட்ட செய்வோம்!
Posted on by Hari

Dec 23, 2020

சுதந்திரம் என்பது யாதெனின்

என்குணத்தான் இறைவன் முழு சுதந்திரன்!
முழு சுதந்திரம் என்பது யாதெனின்;

காணொன்ன வற்றின் கட்டுப்பாட்டிலிருந்து விடுதலை
இதுவல்லது அதுவென்ற மட உகப்பிலிருந்து விடுதலை 
விருப்பு வெறுப்பு அவாவிலிருந்து விடுதலை
எவரும் எவ்வுணர்ச்சியும் தூண்டொன்னா விடுதலை

பிணிநெருங்கா ருசிஊறா பெருமையுறா விடுதலை
தான் தூண்டா பசி என்றும் நெருங்கா விடுதலை
அனுமதியின்றி ஜீவ விரயத்திலிருந்து விடுதலை
தன் ஆணையின்றி உடலை உயிர் பிரியா விடுதலை

இவையின்றி நான் சுதந்திரன் என்று முழங்கலாகுமோ?

சட்ட திட்டங்கள் சீண்டா விடுதலை
பாசபிணைப்பில் ஒடுங்கா விடுதலை
மன சுருள்கள் சுருக்கா விடுதலை
உடல் வரம்பு இருக்கா விடுதலை
உடலை பிரிந்த உயிருக்கே உரிய விடுதலை
உயிர் நிலையில் வாழ்வோர் மட்டும் உணர்ந்த விடுதலை

இவ்விடுதலை கண்டோரை கண்டால் அறிவீர்,
சுதந்திரம் ஒன்றே அர்த்தமுள்ள நாட்டம்!
Posted on by Hari

Nov 24, 2020

ஆறாதார அடைப்பு

வாழ்வாதாரம் தேடி 
துர்நாற்றம் சூழ்ந்து
பயத்தில் உழலல் 
மூலாதார பூட்டாம்

இன்பம் சிதறி
அருசுவை தவிர்த்து
குற்றவுணர்வும் தாழ்ச்சிகுணமும்
சுவடித்தன அடைப்பாம்

செல்வம் விலக
அழகுரசனை குன்றி
அவமானம் அணுகுதல்
மணிப்பூரக முடிச்சாம் 

சுற்றம் எதிர்க்க
அரவணைப்பு குன்றி
விநயம் சுருங்குதல்
அனாகத அணையாம்

கலாரசனை குன்றிட
நல்லிசை செவிமறுக்க
கலையின்றி வாழ்தல் 
விசுத்தி முறுக்காம்

இறைக்குரல் கேளாமை
உள்ளுணர்வு பொய்த்தல்
நினைத்ததங்கனமே நிறையாவிடில்
ஆக்கினை தாழாம்
Posted on by Hari

Nov 12, 2020

ஹைக்கூ

ருசிக்க மறந்தவன்!! 
செல் போனில் லாக் ஸ்க்ரீன் வால் பேப்பராக வைத்து மறந்தான்
தன் ரசனையை!

மழை!!
மார்கழியானால் பூமிக்கே ஜலதோஷம் பிடிக்கிறது,
மனிதன் எம்மாத்திரம்!

கனவு பலித்தது!!
இப்படி ஒரு பெண் வேண்டும் என்று
தவம் இருந்தான் ஒரு இளைஞன்.

சில வருடங்களில் கழிந்தது.
இறைவன் இளகினான்! தவம் பலித்தது!
அப்படியே ஒரு பெண் கிடைத்தால்.

அப்பாவென்று கட்டி அணைத்து
முத்தமிட்டாள்!

15 வருட கனவு!!
15 வருட கனவு நினைவானது.
ஜெர்மானிய வாகனம் வாங்கினான்.
பழகிய கனவின் துணை இன்றி,
தூக்கம் இழந்தான்!
Posted on by Hari

Jul 11, 2020

செய்வன திருந்த செய்

my dad is the best!
என்று சொல்ல மகள் தயங்கினால்,
தந்தை என்ற பட்டத்திற்கு
தகுதி அற்றவன் நீ!

எவனோ ஒருவன் அவதூறு பேச,
அதை சொல்ல நீ யார்? என்று
வரிந்து கட்டிய மனைவியின்
குரல் சொல்லும் உன் புருஷ லக்ஷணம்!

உன் உடலில் குருதி சிந்தினால்,
தந்தையின் நெஞ்சில் ரௌத்திரமும்
தாயின் கண்ணில் நாளங்களும்
வெடிக்காவிடில், பூமிக்கே பாரம் நீ!

சிக்கலில் மாட்டி திணறும்
சக ஊழியன், உன்னை கண்டதும்
அப்பாடா! என்று பெருமூச்சு விடாவிடின்,
நீ இருந்து என்ன பயன்?
Posted on by Hari

Jul 10, 2020

வேலை இழந்த ஓட்டுனன்

தானே இயங்கி வாகனம் வந்தது,
வேலை இழந்தான் ஓட்டுனன்.

பழி வாங்காமல் பால் கொடுத்து,
வாழ்வளித்தது வீட்டு மாடு.

நீ வந்த வேலை என்னவென்று 
இப்போதாவது சிந்தி.
Posted on by Hari

Jul 7, 2020

இறை தூதராம் மழலையர்

இறை தூதராம் மழலையர்!
கொண்டு வந்த செய்தியை
சொல்ல தவிக்கும் திணரலே
அடம் அழுகை சிரிப்பு சிணுங்கல்

சொல்லும் யுக்தியை கற்கும் முன்
நம் சித்தாந்தத்தை திணித்து
அவர் மெய்ஞ்ஞானதிற்கு உறையிட்டு
நம்மைப்போல் ஆக்கி மகிழ்கிறோம்

மனம் தளராது மீண்டும் ஓர் தூதனை
நம்மிடம் அனுப்பும் இறைவனுக்கு
இத்தூதர் மீது அவ்வளவு நம்பிக்கையா?
அல்லது நம் மீது அலாதி கருணையா?
Posted on by Hari

Jul 1, 2020

I wish...

I wish everyone can manifest all the wealth they need,
for in it is the manmade bait uncovered

I wish everyone can instantly become everything they aspire,
for in it is the futility of fame soon dodged

I wish everyone can animate all the things they wish for,
for in it is the exhaustion of material crave realized

I wish everyone can fulfill all the sensory needs they crave,
for in it is the insatiable nature of desires exemplified

I wish everyone can assimilate all the knowledge possible,
for in it is the distress of constipated mind cognized

I wish everyone can be as intelligent as the brightest,
for in it is the anguish of the sharpest knife suffered

I wish everyone can be as valorous as an immortal,
for in it is the realization that nothing is worth the fear

I wish everyone can regain the innocence they lost,
for in it is the cradle of mother nature relished to the hilt
Posted on by Hari

Jun 15, 2020

நான் - நின்ற நிலைகள்

பூமி உடல்
அசைவு உடலுக்கு
உழைப்பு உடலுக்கு
சுகம் உடலுக்கு

சந்திரன் மனம்
எண்ணம் மனதிற்கு
கேளிக்கை மனதிற்கு
ஓய்வு மனதிற்கு

சூரியன் உயிர்
உணவு உயிரிற்கு
உறக்கம் உயிரிற்கு
காப்பு உயிரிற்கு

வெளி கோள்கள் அடையாளம்
பண்பு அடையாளத்திற்கு
ஞானம் அடையாளத்திற்கு
ஊக்கம் அடையாளத்திற்கு

உள் கோள்கள் புத்தி
தகவல் புத்திக்கு
கல்வி புத்திக்கு
அறிவு புத்திக்கு

விண்மீன்கள் சித்தம்
தன்னிறைவு சித்தத்திற்கு
சித்துக்கள் சித்தத்திற்கு
பக்தி சித்தத்திற்கு

பால்வெளி பொருள் ஜீவன்
பேரின்பம் ஜீவனுக்கு
வலி ஜீவனுக்கு
சமாதி ஜீவனுக்கு

அருவான வெளி ஆன்மா
ஆனந்தம் ஆன்மாவிற்கு
முக்தி  ஆன்மாவிற்கு
ஈசத்துவம் ஆன்மாவிற்கு
Posted on by Hari

May 29, 2020

காரண காரியங்கள்

அமைதி தேடும் சமூகசேவையும்
வாகனம் வேண்டி பக்தி செலுத்தலும்
நோய் தீர தியானம் செய்தலும்
வீணான செயல்களே!

கண்மூடி பழக்கங்களை கைவிட்டு,
காரண காரியம் அறிந்து முயற்சியுங்கள்!

ஞானம் வேண்டுமாயின் தியானம் ஒன்றே வழி
முக்தி வேண்டுவோர் பக்தி பழகுங்கள்
மனம் அமைதியடைய நன்னெறி பற்றுதல் வேண்டும்
ஆரோக்கியம் தேடி அலைவோர் சுயஒழுக்கம் கொண்டால் போதும்
மதிப்பு போதுமென்றால் சமூக அக்கறை கொள்ளுங்கள்
இன்பத்தில் திளைக்க உடல் வருத்தி உழைத்தல் வேண்டும்

இவை அனைத்தும் வேண்டுமாயின்
அனைத்தையும் கடைபிடித்தல் ஒன்றே வழி!

Posted on by Hari

May 22, 2020

தாய் என்பது உணர்வு

ஊழி இணைத்தது உறவு
அதுவே சமூகத்தின் திறவு

உடலளவில் கூடியது சுற்றம்
பகிர்ந்து வாழ்தல் உற்றம்

எண்ணங்கள் ஒன்றுபட்டால் நட்பு
அன்பிற்கும் அறிவிற்கும் துடுப்பு

உள்ளங்கள் பிணைந்தது குடும்பம்
பிழைபொறுத்து வாழ்ந்தால் சிறக்கும்

தாய் என்பது உணர்வு
உறவென கருதுதல் தவறு

பிறப்பால் அமைவதும் உண்டு
உணர்வால் இணைவதும் உண்டு

பார்வையால் பேசும் மீனன்னை
சிந்தையால் சொல்லும் ஆமைத்தாய்

மனிதனை ஏமாற்றுமோ இயற்கை
உணர்வால் வழிநடத்துவாள் உன் அன்னை

உறங்கி விழிப்பது இறைவனின் பொறுமை
வெளியேறி வீடுதிரும்புதல் அன்னையின் கருணை

Posted on by Hari

May 18, 2020

தன்னை அறிதல்

இனங்களை அறிய பண்பு பிளிறும்
மனதை அறிய அறிவு துளிரும்
உடலை அறிய ஒழுக்கம் மிளிரும்
உள்ளத்தை அறிய அன்பு மலரும்
இறையை உணர அருள் தளிரும்
தன்னை அறிய ஞானம் ஒளிரும்
Posted on by Hari

Apr 29, 2020

கடப்பாயா?

அபிப்ராயங்களை கடந்தால் ஆசைகள் அறியலாம்
ஆசைகளை கடந்தால் மனதை அறியலாம்
மனதை கடந்தால் உடலை அறியலாம்
உடலை கடந்தால் உயிரை அறியலாம்
உயிரை கடந்தால் ஈசனை அறியலாம்
Posted on by Hari

Apr 15, 2020

உன் வாழ்கை! உன் விருப்பம்!

உறக்கத்திற்கு அடிமையாய் இருக்கும் வரை,
ஊக்கம் அடையலாகாது!

இரைக்கு அடிமையாய் இருக்கும் வரை,
இறைநிலை அறியலாகாது!

ருசிக்கு அடிமையாய் இருக்கும் வரை,
ஆரோக்கிய குறைபாட்டில் உழல்வாய்!

காமத்திற்கு அடிமையாய் இருக்கும் வரை,
மனப்போராட்டம் விலகாது!

எதை பற்றுவது எதை விடுவது,
எல்லாம் உன் விருப்பமே!

காரணமும் காரியமும் பின்னி பிணைந்தவை,
பிரித்து சுகிக்கலாகாது!

எழுச்சி காரணம்:
--------------------------
ஒண்ணான மவுனமென்றே யோகம் விட்டால்
ஒருபோதுஞ் சித்தியில்லை வாதந் தானும்
பெண்ணார்தம் ஆசைதன்னை விட்டு வந்தால்
பேரின்ப முத்திவழி பேசுவேனே!

- உரோம ரிஷி
Posted on by Hari

Mar 9, 2020

இயக்குநீர் போதை

எங்கிருந்தோ ஆட்கொண்ட ஆர்வத்தை தீட்டி
முழு மனத்தோடு முயர்ந்தது கற்று
உடலை வளைத்து உழைப்பை செலுத்தி
பல தோல்விகளை தொய்ந்து கடந்து
வென்றோரை கண்டு ஊக்கம் தேற்றி
வெற்றியின் ஓரிரு துகள்களை ருசித்து
வென்றோன் வலியோன் என பூரித்து
இயக்குநீர் போதையில் உழன்றிருந்தேன்!

சலிப்பு என்ற துடுப்பை நீட்டி
கருணையோடு கரை சேர்த்து
ஆர்வ ஊற்றை கடந்து காட்டி
குழவி வழியே அகந்தை அகற்றி
உம் வெற்றியில் எம் தோல்வியை பூட்டி
ஒளிந்திருந்த அனுபூதியை வெளிப்படுத்தி
களங்கமகற்றி ஈர்த்து அணைக்கும்
உன் குறும்பிற்கும் ஓர் சலிப்பு உண்டோ?
Posted on by Hari

Jan 19, 2020

வார்த்தைகள் வெறும் கற்களே!

விவாதம் சமவாதம்
விசாரணை பேட்டி
விதண்டாவாதம் கேலி
என்று பரிமாறும் கற்களை கொண்டு

இருவரை சுற்றி செவர் எழுப்பினால்,
வார்த்தைகள் தீர்ந்ததும்
பரஸ்பர தகவல் தொடர்பு
மௌனத்தில் முழுமை காணும்!

சிந்திய கற்கள் இடையில்
குவிந்து செவராய் நின்றால்,
கற்கள் தீர்ந்ததும்
நீ யாரோ நான் யாரோ!

பின்குறிப்பு:
வார்த்தைகளில் உண்மையை தேடாதீர்
வார்த்தைக்கும் உண்மைக்கும் சம்பந்தமே இல்லை.

உண்மை என்பது  உணர்வின் வெளிப்பாடு
கண்களே உணர்வின் ஜன்னல்கள்.

வார்த்தைகளால் முழுதாய் வெளிப்படுவது
பேச்சு திறனும் மொழியின் நிபுணமும்.

Posted on by Hari

Dec 23, 2019

உண்மை என்பது உணர்வு

உண்மை என்பது உணர்வு.
அன்பில் உண்டு, அறிவில் இல்லை!
உணர மட்டுமே முடியும், அறியலாகாது!

அறிவு என்பது வெறும் எண்ண குவியல்.
உச்சரிக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பொய்யே!
ஒவ்வொரு செயலும் முழுமையற்றதே!

சொல்லிலும் செயலிலும் உண்மையை தேடாதே!
அவற்றை தூண்டிய உணர்வே உண்மையின் ஊன்றுகோல்.
உணர்வற்ற செயலில் உண்மையே இல்லை.

உணர்வை உணர்வால் மட்டுமே வெளிப்படுத்த இயலும்.
உண்மையை உணர மட்டுமே முடியும்.
அவ்வுண்மையை உணர்கையில் உயிர் முழுமைகாணும்.
Posted on by Hari

மூடனும்.. தெய்வமும்..

மூடன் - பெண்பால் இணை அற்ற சொல்!

பெண்மையில் மூடமையே இல்லை!
மூடரை மீட்டெடுக்க வந்த தெய்வங்களே பெண்கள்!
உன் மூடமையின் விளைவுகளை தான் ஏற்று உன்னை காக்கும் தெய்வம்.

பல தெய்வங்கள் காலில் விழ அனுமதிக்கும்...
தன் வலியை தானே ஆற்ற தெரிந்த அன்னையர் அவர்
உன் ஆணவம் தேய அத்தெய்வம் அளிக்கும் ஓர் வாய்ப்பு!

சில தெய்வங்கள் உன் மார்பில் சாய்ந்து தன் வலி ஆற்றும்...
சங்கமத்தில் உன் ஆணவம் கரையாவிடின்,
ஆண்மகனை ஈன்றெடுத்துத் தன் தவத்தை தொடரும்!

சாய்ந்த தெய்வம் சாந்தி அடைந்தால்,
உன் குலதெய்வமே உன் மடியில் விளையாடும்,
கொஞ்சி இன்புற வாய்ப்பளிக்கும்!

தெய்வம் - ஆண்பால் இணை அற்ற சொல்!
Posted on by Hari

Nov 13, 2019

உடல்.. மனம்.. உயிர்

உடல் பூமி
உயிர் சூரியன்
மனம் சந்திரன்

பூமியின் சுழற்சி உடல் வளர்க்கும்
சூரியன் எழாவிடின் யாவும் உயிரிழக்கும்
சந்திரனோடு மனம் விரிந்து சுருங்கும்

உடல் நிலம்
உயிர் விதை
மனம் நீர்

நிலத்திறன் வெளிப்பட விதை தேவை
விதை மரமாக நிலம் தேவை
நிலம் விளைய நீர் தேவை!

உடல் பசு
உயிர் பதி
மனம் பாசம்

உடலுக்கு உருக்கொடுத்தவள் தாய்
உயிர் ஊற்றியது தந்தை
மனதின் ஆக்கம் உன் கிரகிப்பு!

உடல் இயக்கம்
உயிர் சாத்தியம்
மனம் தோணி

உயிரற்ற உடல் பிணம்
உடலற்ற உயிர் ஆன்மா
உடலற்ற மனம் எண்ணம்

உடல் சக்தி
உயிர் சிவம்
மனம் சுவாசம்

மனதின் சேவகன் உடல்
மனதின் எரிபொருள் உயிர்
மனதின் உபபொருள் சுவாசம்!

ரத்தம் சக்தி
நிணநீர் சிவம்
தட்டு மனம்

ரத்தம் உடல் காக்கும்
நிணநீர் உயிர் காக்கும்
தட்டுகள் இவற்றின் பாலம்!

அணுவின் நேர்மின் சிவம்
அணுவின் எதிர்மின் சக்தி
நொதுமி சுவாசம்

கருவில் அமர்ந்து ஈர்ப்பது சிவம்
அணுகரு சுற்றி ஆற்றல் பெருக்கும் சக்தி
சக்தியின் ஆற்றலை வெளிக்கொணரும் நொதுமி!

செயல் சக்தி
கொள்கை சிவம்
எண்ணம் சுவாசம்

ஆற்றல் தாயின் தூண்டுதல்
அறம் தந்தையின் பொறுப்பு
அறிவு உனது வெளிப்பாடு!

அகாரம் சக்தி
உகரம் மனம்
மகரம் சிவம்

அகாரம் கனல் காற்று
உகரம் குளிர் காற்று
மகரம் அமுத காற்று!

உடல் சக்தி
மனம் சுவாசம்
உயிர் சிவம்

சக்தி விரயம் நிறுத்தி
சுவாசம் நெறிப்பட்டு
சிவத்தை உணர்வதே தவம்!
Posted on by Hari

Aug 5, 2019

இயற்கை நிலை


ஆரோக்கியம் ஆடம்பரம் அல்ல
உடலின் இயற்கை நிலை!
மனதின் போக்கு உடலை வருத்தும்
கர்மம் கரைய தானே மேம்படும்
ஒழுக்கமே ஆரோகியத்தின் திறவுகோல்

அமைதி தேடிசெல்லும் பொருள் அல்ல
மனதின் இயற்கை நிலை!
உணர்ச்சிகளின் கூச்சல் மதி மயக்கும்
மாயை விலக தானே வெளிப்படும்
மன்னிப்பும் நன்றியுணர்வும் வழிவகுக்கும்

ஆனந்தம் அறிய பொக்கிஷம் அல்ல
ஜீவனின் இயற்கை நிலை!
தான் என்று இருப்பவன் அறியலாகாது
ஆணவம் அழிய அனுபவம் வாய்க்கும்
சரணாகதியே பரமானந்தத்தின் பாதை
Posted on by Hari

Jun 7, 2019

நடத்தைக்கு சான்றளிக்கும் சமூகம்

அகந்தையின் உச்சத்தில் வெளிப்படும் கருணையினும்,
அக்கறையின் காரணத்தால் பொங்கிவரும் கோவம் தூயதே!

காமத்தின் தூண்டுதலால் கண்டெடுக்கும் காதலினும்,
காதலின் கொண்டாட்டமாய் வெளிப்படும் காமம் புனிதமே!

மற்றவளை மனதில் கொண்ட மஞ்சத்தின் கொஞ்சலினும்,
தன்னை முழுமனதோடு விலக்கும் வெறுப்பு சிறந்ததே!

உன் உயர்வை அரைமனதோடு ஏற்கும் வாழ்த்தினினும்,
பொறாமையில் வெம்பி உதறும் தவிப்பு உன்னதமே!

இதை கொடு அதை கொடு என்பவனின் பக்தியினும்,
என் வினை என் பலன் என வாழும் பகுத்தறிவு மேலானதே!

வெளிப்படும் நடத்தையை கண்டு ஏமாறும் முன்,
அதன் பின் உள்ள தூண்டலை உணர முயல்வோமா?
Posted on by Hari

May 22, 2019

பசி.. பிணி.. மூப்பு!

பசி.. பிராண விரயத்தின் பின்விளைவு!
ஆட்டம் நடை பேச்சு எண்ணம்
போன்ற செயலின் எரிபொருள் பிராணன்!
காய் கனி இலை தழை விதையில்
தனது பிராணனை அடக்கி காத்து,
பிற உயிர்களுடன் பகிரும் தாவரங்களை
உண்டு பசியாற்றும் மனித இனமே,
அத்தவிரங்களுக்கு ஏதேனும் கைமாறு செய்வாயோ?
உனது ஜீவனை என்றேனும் காக்க முயல்வாயோ?
பிரவுயிருடன் பகிரும் யுக்தியை பயில்வாயோ?

பிணி.. அத்துமீறிய பிராண விரயத்தின் எதிர்வினை!
இவ்வுடலை சீர்படுத்தி தக்கவெக்க
உயிர் எடுக்கும் ஓர் முயற்சி!
அம்முயற்சியை தடுக்கும் ரசாயினத்தை உண்டு,
உடலையும் மனதையும் மேலும் வருத்தி,
உயிரையும் படைப்பையும் நிந்தித்தாலும்,
தன் முயற்சியை கைவிடாது போராடும் உயிரை
ஒருமுறையேனும் உணர்ந்தால் போதும்,
பிணியை கடந்து, மனமும் அடங்கி,
இவுடலுக்குள் ஜீவனை நித்திய மாக்கிடலாமே!

மூப்பு.. ஜீவ சோர்வின் பிரதிபலிப்பு!
நிதமும் பிறைபோல் தேய்ந்து வளர்ந்து,
பொலிவிழந்து சோர்வடைந்த உயிரின் தளர்ச்சி!
இளமை அழகு வீர்யம் என்ற ஆணவத்தை சுருக்கி,
பொருள் புகழ் போன்ற மாயையின் தாக்கம் குறைத்து,
இன்ப துன்ப அனுபவங்களில் கன்மத்தை கரைத்து,
இவுடலை சிரமமின்றி கைவிட பழக்கும்
உயிரின் கருணையே மூப்பும் மரணமும்!
மாண்டவர் நினைவால் சுரக்கும் கண்ணீரின் புனிதம்,
கடமைக்கு வழியும் கண்ணீரில் நீர்த்துப் போகலாமா?
Posted on by Hari

May 20, 2019

விகற்பம்.. ஆணவம்.. மாயை.. வலி..

விகற்பமே வாழ்வின் ஆதாரம்
இவ்வுயிரை உடலோடு ஒட்டிய பசை!

ஆணவமே செயலின் தூண்டுகோல்
எண்ணத்தை ஒலிஒளி யாக்கும் துடுப்பு!

மாயையே மேடையேறும் களம்
அநித்ய அனுபவங்கள் அவசிய உளியடி!

வலியே காயத்தின் நண்பன்
கவனத்தை ஈர்த்து குணப்படுத்தும் யுக்தி!

கடன் வாங்கிய அர்த்தங்களை ஆராய்ந்து பார்
ஆழமறிந்து வாழ்ந்து தொய்ந்து கடந்தும் கான்!
Posted on by Hari

Oct 18, 2018

முதியோர் இல்லத்து முரண்!

என் மகன் அரசு ஊழியன் என் மகள் மருத்துவச்சி
என கர்வம் கொண்டீரோ!

தினந்தோறும் செக்கரைக்கும் வேலையை
பெருமிதம் கொண்டு போற்றிநீரோ!

ஒரு சுழற்சி முறையை கண்டறியும் வரையே
மனம் உடலோடு சேர்ந்து இயங்கும்

அறிந்தபின்னும் அச்செயலையே செயதிடின்
மனம் விலகி எண்ண அலைகளில் மிதந்தோடும்

உடலும் மனமும் விலகி செயல்படுதல்
அவனது ஆன்மாவிற்க்கு இழைக்கும் அநீதி

பொருளீட்ட ஆன்மாவையே அடகு வைத்தவன் 
தாய் தந்தையை கைவிட தயங்குவானோ?
Posted on by Hari

Aug 13, 2018

எத்தனை அகந்தையோ!

வண்டு செய்த சீனியை; மிஞ்ச சீனி செய்திலர்!
கிரி ஆழி மிஞ்ச ஓர்; வேலி செய்தோர் இங்கிலர்!
ஸ்தூலமான பொருட்களின் வடிவு மாற்றி விளம்பிடும்,
ஐந்தறிவின் ஆற்றலின் துணுக்கையை தழுவிடும்,
வீணான மனிதரில்; எத்தனை அகந்தையோ!
Posted on by Hari

Jul 24, 2018

சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?

சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?

தவறான செயல், சரியான காரணம், சரியா தவறா?
தவறானவன், சரியான செயல், தவறாகுமா?
தவறின் விளைவு செரியாயின், தவறும் சரியாகுமா?
தவறை சரிசெய்ய செய்த தவறும் தவர்தானா?

சரி தவறை பகுத்துரைப்பவன் சரியானவனா?
தவறிய சிந்தை சரியாயினும் தவறானவனா?
சரி தவறுக்கு அளவுகோல் இழைத்தல் சரியாகுமா?
சரியிது தவறிது என்றேதேனும் உண்டோ?
Posted on by Hari

Jul 19, 2018

இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?

நல்லவன் வல்லவன் என்ற
வீணர்களின் நிலையற்ற கருத்திற்கு

நியமம் கெட்டு...
உடல் வருத்தினாய்
மனம் அடக்கி தவித்தாய்
மஹான் என்றார்கள்

இயமம் கெட்டு...
சகமனிதனை சூரையாடினாய்
இயற்கையை துயிலுரித்தாய்
ஆற்றல் மிக்கவன் என்றார்கள்

ஆடம்பரத்திற்கு அத்தியாவசியத்தை
அடகு வைத்து தரம் கெட்டு திரியும்
ஆட்டு மந்தைகளா உன்னை வழிநடத்துவது?

இயற்கையை இழைத்து இறைச்சியாக்கி
சுகிக்கும் சமூகத்தோடு ஒன்றிவாழ
இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?
Posted on by Hari

உன் ஆசைகள் உன்னுடையதா?

நட்பயிர் விளைய ரசாயன உப்பு அவசியமில்லை
வேதியல் கழிவும், அகற்றும் உப்பையும் விற்க
ஆயிரம் ஆண்டுகளாக செய்த விவசாய முறையே தவறு
என்றால் நீ ஏன் நம்பினாய்?

நலமாய் வாழ மருந்தின் அவசியமில்லை
மருந்தை விற்க ஆரோகியம் அகற்ற வேண்டும்
உணவும் ஒழுக்கமும் பழைய பஞ்சாங்கம்
என்று திணிக்க நீயும் சரிந்தாய்

உறைவிடம் அமைக்க ஆற்றுமணல் அவசியமில்லை
பைஞ்சுதை விற்க ஒவ்வாத கட்டிட முறை
அக்கட்டிடங்களே வாழ்வின் நோக்கம்
சமூகம் போற்றும் என தவறான சித்தாந்தம்

அமைதிக்கு ஆசைகள் நிறைவேற தேவையில்லை
திணிக்கப்பட்ட தேவையற்ற ஆசைகளை வேரறுக்க பழகு
ஆசையின் ஊற்றை உணர்ந்ததுமே, உன்னை நீ கேட்க வேண்டியது,
இந்த ஆசை உன்னுடையது தானா?
Posted on by Hari

Jun 28, 2018

அழகு அறிவு வீரம் ஆற்றல்

அழகு அறிவு வீரம் ஆற்றல்
அறத்தை மீறி செயல்பட தூண்டும்
அந்நியனையும் கவர்ந் திழுக்கும்
விளம்ப விளம்ப மகிழ்விக்கும்

அழகு அறிவு வீரம் ஆற்றல்
மனித வளர்ச்சியின் தூண்டுதல் ஊற்று
ஓர்யுக புகழின் அடிப்படை ஆணிவேர்
மனிதன் நிகழ்த்திய பிரளயங்களின் மூலம்

கண்டவுடனே ஈர்க்கும் அழகு
கேட்க கேட்க வியப்பளிக்கும் அறிவு
காலம் ஏற்பட போற்றப்படும் வீரம்
முடிவின் சாதகத்தில் அறியப்படும் ஆற்றல்

அழகும் ஆற்றலும் ஓங்க அறிவு தேங்கும்
அழகோ அறிவோ ஓங்க வீரம் தேங்கும்
வீரமும் ஆற்றலும் ஓங்க அழகை கவரும்
அறிவும் ஆற்றலும் ஓங்க சமூகத்துக் குபாயம்

பொறுமை ஞானம் மனஸ்திரம்
ஷரத்தை பகிர்தல் பயில்வித்தல்
போன்ற இயல்புகள் மெருகூட்டுபவை!
விளம்பத்தகா! சாண்றோனன்றி அறியப்படா!
Posted on by Hari

Jun 17, 2018

யானறிந்த உறவினிலே!

யானறிந்த பெண்டிரிலே முன்னோடி
எனை ஈன்ற தாய்
முதன் முதலே கையில் ஏந்திய
அவள் அத்தை என் ஆச்சி
உச்சி முகர்ந்து கொஞ்சி வளர்த்த
என் பாட்டி
ஓடி விளையாடி பகிர்ந்துண்ட
என் அக்காள்
தாயோ தமக்கையோ என்றிருந்த
என் அத்தையார்
இள வயதில் மனமீர்த்த
அரு மங்கையர்
விரும்பி மணந்து சகித்தும் தழைக்கும்
என் மனையாள்
நிதம் ஆணவம் அழித்து அன்பை ஊற்றும்
என் மகள்

யானேற்ற உறவினிலே
மிக ரசித்து சுகித்தது தந்தையாக!
என்னை சுற்றி சுழன்ற என்னுலகம்
அவளை சுற்ற நகர்ந்தது

என் பசி என் வலி
பெரிதென்றிருந்தேன்
துச்சம் என கண் இமைப்பில்
உணர்த்தினாள்

இலக்கென்ன, வாழ்வின் அர்த்தம்
எது தர்மம், எங்கு மோக்ஷம்
என்ற தேடல் ஊற்றெடுக்க
என் மடியை சிறுநீரால் நனைத்து
புண் முறுவல் பூத்து
நிகழ்காலத்திற்க் கிழுத்தாள்

நான் வெம்பி அழுத நாட்களை
விரல் விட்டு எண்ணலாம்
அவை யாவும் விமானநிலையத்தில்
உன் விரலை வருடிப் பிரிந்த தருணமே

அன்பு நேசம் பாசம் காதல் என
ஒற்றை வார்த்தையில் ஒலியளிக்க முடியா
உறவளித்த என் உயிர் அணுவே!
என்றென்றும் உன் தந்தை என் மகளே!
Posted on by Hari

Jun 4, 2018

நெறி

தனக்கு நிகழக்கூடாததை
மற்றவனுக்கு நிகழ்த்தாதே

முன்னிலையில் பேச தகாததை
எந்நிலையிலும் பேசாதே

என்றேனும் எனதில்லை என்பாயெனில்
அவ்வெண்ணங்களை விளைக்காதே
Posted on by Hari

வாழ்வியல்

மாற்றோன் எண்ணப்படி வாழ்வது
உன் வழி அல்ல

உன் எண்ணப்படி வாழ்
எனினும் சார்ந்தோனை துன்புறுத்தாதிரு

மாற்றோன் எதிர்பார்ப்பதும் அதன் எதிர்மறை
செயலும் செய்யாதிரு

தர்மம் ஆச்சாரம் கருணை பயிலாதே
தானே மலர்ந்தபின் பழகியிரு
Posted on by Hari

Jun 3, 2018

மிகினும் விளைவும்

வஞ்சம் மிகியோன் குரோதம் மறைப்பான்
இன்சொல் உரைப்பான்

பயம் மிகியோன் கடுஞ்சொல் உரைப்பான்
உறவுகள் அருப்பான்

குரோதம் மிகியோன் மதி ஒடுங்கியோன்
பல்நாள் சேமிப்பிழப்பான்

காமம் மிகியோன் கனவுகள் மறப்பான்
இலக்கினை அடையான்

லோபம் மிகியோன் காமம் தணிந்தோன்
சூழ்நலம் கெடுப்பான்
Posted on by Hari

May 14, 2018

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?
நினைவுகள் அற்ற நிலையில் இருந்தது
அவசியம் ஏற்படும்போது மட்டுமே நினைப்பவனுக்கு!

நீர் விலகி வழிவிடும்..
ஐம்பூதங்களில் இருந்தது விலகி வசித்து
தேவை ஏற்பட ஆணை இடுபவனுக்கு!

தொட்டவுடன் பிணி நீங்கும்..
பிரபஞ்ச சக்தி நிறைந்து வழியும்
ஸ்தூல உடலோன் மனமிரங்கி தொட்டால்!

கண்டவுடன் கன்மம் விலகும்..
என்றும் அகம் நோக்கி இருப்பவன்
என்றேனும் கனிவால் கண்கொண்டு நோக்கின்!
Posted on by Hari

May 11, 2018

விளம்பாதே!

செல்வ விளம்புகை கீழானோர் செயல்
ஆற்றல் விளம்புதல் அறிவற்றோர் செயல்
யவ்வன விளம்பல் அநாகரீக செயல்
அறிவு விளம்பை மும்மூடர் செயல்
ஆசார விளம்பியல் அனாசார செயல்
ஞான விளம்பு பரிகசிக்கும் செயல்
Posted on by Hari

விதிவிலக்கு

பேரழகி
மாவீரன்
பெருஞ்செல்வந்தர்
அறிவாளி
மெய்ஞானி
சாதிமதபேத மண்டாது

அதிசய ஆற்றல்
அரிய சத்து
தனிப்பட்ட சுவை
மருத்துவ குணம்
பல்நாள் பசி
உணவு கட்டுப்பாடு உடைத்தெறியும்

நிலநடுக்கம்
பெருவெள்ளம்
காட்டுதீ
பெரும்பஞ்சம்
போர்காலம்
சமூக சீர்பாடு செயலிழக்கும்

எவ்விதிக்கும் விதிவிலக்குண்டு
Posted on by Hari

May 3, 2018

வளர்ச்சி ஆகுமோ?

உயர் நிலை கண்டு கீழ் நிலை கைவிடுதல்
வளர்ச்சி என்றாய்
உயர் நிலை கீழ் நிலை எதுவென
பகுத்தறிய மறந்தாய்

வேட்டையாடி வாடியபின் விவசாய பற்று கொண்டு
உணவியல் வளர்ச்சி என்றாய்
தானியம் காய் கனி சத்தறிந்து உண்டு பழகி
மீண்டும் மாமிச மோகம் கொண்டாய்

விளைச்சல் பலரை சேர்ந்தடைய செய்து
பங்கீட்டு வளர்ச்சி என்றாய்
பங்குசந்தைகள் அமைத்து லாபத்திற்கு தரத்தோடு
அடிப்படை தன்மையும் அடகு வைத்தாய்

இயற்கையோடு ஒன்றி சமூக நுட்பமமைத்து
பரிணாம வளர்ச்சி என்றாய்
இயற்கை அழித்து சில இனத்தையும் அழித்து
வெற்று பொருளீட்டி மகிழ்ந்தாய்

விண்வெளி அமைப்பை ஆராய்ந்து தொகுத்து
விஞ்ஞான வளர்ச்சி என்றாய்
விண்வெளி கோள் அமைத்து வளங்களை சூறையாட
வனங்களை அழித்தாய்

உண்டு உறங்கி நாட்கள் கழித்து சலித்து ஆலயமமைத்து
ஆன்மீக வளர்ச்சி என்றாய்
உண்டு உறங்கி நாட்கள் சலித்து கழித்து ஆன்ம குமுறலுக்கு
செவிகொடுக்க மறந்தாய்

வந்த காரணம் அறிய அகமும் புறமும் தேடல்
மெய்யரிவு வளர்ச்சி என்றாய்
வந்தோம் வாழ்ந்தோம் என்றிருந்து படைப்பாற்றல்
ஆக்குத்திறன் வீணாக்கி சென்றாய்

பஞ்சபூத கட்டுப்பாடு கடந்தவனை தேடி வணங்கல்
மெய்ஞ்ஞான வளர்ச்சி என்றாய்
அச்சான்றோனை கண்டறிய தவறி கெக்கலித்தது
வந்த வாய்ப்பும் இழந்தாய்

மண்ணையும் மரத்தையும் காத்து வாழ்தலே
நிலையான வளர்ச்சி என்றாய் 
குழைம பொருட்களும் அவற்றை இயக்கும் சிற்றறிவும்
வளர்ச்சி என்று பூரித்தாய்

சீரென வாழ்வமைத்து.. நல்வளங்களை கண்டறிந்து..
சமூக சீற்பாட்டில் பங்கேற்று.. மனைவாழ்பவரை மகிழ்வித்து..
சிறந்த ஆரோக்கியம் பேணித்து.. மிக தெளிந்த மனம்கொண்டு..
சித்தனை வணங்கி சரணடைந்து.. பிறவா வித்தை கற்று பழகி..

ஏகஜோதியான பரம்பொருளோடு ஐக்கியமாவாயா?
மீண்டுமொரு யோனிவழி பிறப்பெடுத்து வளர்ச்சி நாடுவாயா?
Posted on by Hari

Apr 23, 2018

எதை நிந்திப்பது?

அத்யாவசியம் உருவாக்கிய தானியம்
தானியங்கள் உருவாக்கிய நாணயம்
நாணயம் வடிவமைத்த வணிகம்
வணிகம் நடைபெற பங்கு சந்தை
பங்கு சந்தை செயல்பட வங்கிகள்
வங்கிகள் நிர்ணயித்த செல்வந்தர்
செல்வந்தர் ஆட்டிவைக்கும் அரசியல்
அரசியல் கட்டுப்படுத்தும் சமூகம்
சமூகம் சீர்குலைக்கும் இயற்கை
இயற்கை சீற்றத்தில் நீர்நிலம்
நீர்நிலத்தோடு அழியும் வாழ்வாதாரம்
இதில் எதை நிந்திப்பது?
Posted on by Hari

Apr 14, 2018

எதற்காக?

பொருள்.. ஈட்ட வேண்டும்.. சுற்றத்திற்காக
இன்பம்.. சுகிக்க வேண்டும்.. சுயத்துக்காக
கல்வி.. பயில வேண்டும்.. தகவற்க்காக
அறிவு.. தீட்ட வேண்டும்.. வளர்ச்சிக்காக
ஆற்றல்.. அறிய வேண்டும்.. அவசியத்திற்காக
வீரம்.. பழக வேண்டும்.. தற்காப்புக்காக
Posted on by Hari

சான்றிதழின் மதிப்பென்ன?

களம் காணா வாய்ச்சொல்லான்
நீ வீரன் என்று சான்றளித்தல் தகுமா?

மூடர்கள் கூடி அறிவாளி
என்றிட நின்னறிவு ஒளிர்ந்திடுமா?

உன் அறத்தை அளவிட
எவ்வொறு கோலேனும் இங்குண்டா?

உன் நிதானம் அளப்பவன்
உன்னுடன் நிதம் வசித்தானா?

உன் ஸ்திரம் மதிப்பிடுவோர்
உன்னை செதுக்கிய உளிகள் அறிவாரா?

வெற்று காகிதங்களை ஈட்டி
சான்றிதழ்கள் என்று களிப்பாயா?

அளிப்பவனின் கருத்தும்
அளப்பவனின் செருக்கும் உன் ஆளுமையா?

பத்தோடு பதினொன்றாகி மற்றொருவன் கனவை
நிறைவேற்றுவது உன் இலக்கா?

சான்றோன் சான்றாண்மைக்கு
சான்றிதழ்கள் தேவையா?
Posted on by Hari

Feb 1, 2018

அன்பும் ஆதரவும் இயற்கை

பொருளும் வலிமையும் நல்வழி செலவிட மேலும் வளம் பெரும்!
ஒடுங்கி நின்றால் விழுமியம் குன்றி நலிந்து நைந்திடும்!!

அறிவையும் ஆற்றலையும் அவசியமற்று வெளிப்படுத்தாதே!
அஃது மற்றோரை ஈர்க்க பயன்படும் கேளிக்கை பொருட்கள் அல்லவே!!

அன்பும் ஆதரவும் இயற்கை நிலையாய்!
எதிர்மறை வினை நீங்க தானே அறிவாய்!!
Posted on by Hari

Jan 29, 2018

எரிபொருள் நாம்!

நேற்றையை போல் இன்று
இன்றையை போல் நாளை
என்றேனும் ஒரு சிறு மாற்றம்
மீண்டும் அதே அட்டவணை

உடல் உள்ள வரை உழைப்பு
அதன் பின் நம் குழந்தைகள்.
உபயோகமற்ற நிலையில்
துரிதப் படுத்தப்படும் மரணம்.

நீர் நிலம் உணவு என
அதியாவசத்தை கட்டுப்படுத்தி
துருப்பு சீட்டுகளால் திகைப்பூட்டும்
சமூக பொறியாளர்களின் எரிபொருள் நாம்

எரிபொருளுக்கு என்ன உணர்வுகள் கனவுகள்?
இந்த புரிதல் மட்டுமே போதும்
உணர்வையும் கனவையும் ஒத்திவைத்து
அறிவை தீட்டி செயல்பட தூண்டும்.
Posted on by Hari

Jan 19, 2018

வழிப்போக்கு

பயம் பசி பிணி
வாழ்வாதாரத்தை அசைத்து பார்க்கும்

இம்மூன்றும் தணிந்த நிலையில்
பொருள் புகழ் காமம் கேட்கும்

இச்சிற்றின்பங்கள் சலித்த உயிர்
அறம் அறிவு ஆற்றல் தேடும்

இவற்றை வருடிய சாமான்யம்
பின்னோக்கி சிற்றின்பப்பால் செல்லும்

முழுதும் விளங்கிய சான்றாண்மை
அமைதி அருள் ஞானம் நாடும்
Posted on by Hari

Jan 17, 2018

நரகமாகும் நகரம்

இயற்கையால் கைவிடப்பட்டு, உயிர்
காக்கும் தகுதி இழந்த இடம் நரகம்

இயற்கைக்கு புறம்பாக பொருட்களை ஓரிடம் குவித்து
அதை தக்கவைக்க நிதம் பாடுபடும் இடமே நகரம்

பல்லவன் ஆக்கிய  நகரம் காஞ்சி
சோழனின் தலைநகரம் தஞ்சை

ஸ்தலங்கள் காத்து நிற்க
மீண்டும் நாடாகி நிற்கிறது

இயற்கைக்கு எதிர் வினை செய்து
நாட்டை நகரம் ஆக்கினான் மனிதன்

இயற்கையோடு ஒத்தி வாழ
அது தன்னோடு அனைத்து காக்கும்

ஒவ்வாததை தடையாயினும் புண்ணிய
கணக்கு தீரும் வரை காத்திருந்து

தீர்ந்தபின் அழித்து புதைத்து
தன் வழி நெகிழ்ந்து செல்லும்

இயற்கைக்கும் மனிதனுக்கும்
நடக்கும் கயிறிழுப்பு போட்டியில்...

இயற்கை வென்றால் நகரம் நாடாகும்
மனிதன் வென்றால் நாடு நரகமாகும்!
Posted on by Hari

Dec 29, 2017

உறவுகள்

மழலையின் உதடுகள் மூடி திறப்பது
மெல்லினத்தில் அம்மா, வல்லினத்தில் அப்பா
தன் மனை ஆள்பவள் மனையாள்
சக உதிரம் கொண்டவன் சகோதரன் (சக-உதிரன்)
மைதுனம் கொண்டு வந்த உறவு மைத்துனன்
பித்ருவின் பிரதிபலிப்பு மகம், எனவே மகன்
தன் பெயரை நீட்டிப்பவன் பெயரன்
உறவுமுறைகள் வெற்று சொற்கள் அல்ல!
பொருள் அறிந்து உரைக்க, ஒற்றிய ரசாயனம் சுரக்கும்!!

Posted on by Hari

Dec 22, 2017

ஆருயிரே!

சந்திக்கும் முன்பே உன்னை நேசித்தேன்
உன்னுடன் பேச புது மொழிகள் பயின்றேன்
நிதம் விழித்தெழ உன் அழகை ரசித்தேன்
என்வினை பயன்கள் உனக்கே என்றிருந்தேன்
உன் குறும்புகள் ரசித்து என் கனவுகள் மறந்தேன்
ஒரே ஒரு முறை நீ அழ சிரித்தேன்
என் மகளே! ஆருயிரே!
Posted on by Hari

Dec 9, 2017

ஏன்? என்ன? எப்படி?

என்னவென்று உணர ஒரு பெரும் பயணம்
ஏன் என்று அறிய பல பிறப்புக்கள்
எப்படி என்று உரைக்க பல தளங்கள்
முன்னும் பின்னும் சுழற்றி அடிக்கும் சூழல்கள்
இதில் எதை வெறுக்கிறாய்?

இப்பெரிய ராட்டினத்தில் விரும்பி ஏறியவன் நீ!
மேலும் கீழும் சுற்றுகிறது சுழல்கிறது
அச்ச்ம் துக்கம் ஆனந்தம் அலை மோதுகிறது
இதில் களிப்பு மட்டும் வேண்டும்
அசௌகரியங்கள் வேண்டாம் என்று கதறுகிறாய்

இவ்விரண்டும் எனக்கு வேண்டாம்
என்று ஒதுங்குதல் தேக்கம்
அத்தேக்கத்தின் அறிகுறியே ஏக்கம்
இரண்டையும் ஒரு கை பார்க்கிறான்
என்று ரசித்தல் வாழ்கை
அதனின் வெளிப்பாடே பரவசம்

வாழ்ந்து பார்!

அசௌகரியமும் ஓர் அனுபவமே
உடனே விலகி ஓட முயலாதே
வலி பொறுத்து, அது சொல்ல வருவதை ஆராய்
அதன் வேலையை அது செய்து செல்லும்
உனது தன்மையும் சூழலும் மேம்படும்
Posted on by Hari

தூண்டியது எது?

இன்று உன் உணர்ச்சியை தூண்டியது எது?
அதுவே நீ இன்று கடக்க வேண்டிய தடை

சிந்தை சிதறாமல் அனுபவித்தால் கடக்கலாம்
அற்பம் என அறிவால் அறிந்தும் கடக்கலாம்
அருளால் முன் வினைகளை கிரஹித்து கடக்கலாம்
ஆசி இருந்தால் காற்றென கரைத்தும் கடக்கலாம்

கடக்கும் வரை சுழல்வாய், சலிக்கும் வரை சுழல்
சலிப்பை அறிய பழகு, அறிந்த உடனே விலகு!

Posted on by Hari

யார் சுவாமி?


இறையின்பால் சரண் புகுந்தவன் பக்தன்
இடையூறுகளை அகற்ற 
உடல் மனம் தயார் படுத்துபவன் யோகி
தன்னை தனிப்படுத்தி அமைதி தேடுபவன் துறவி 
தவம் பழகுபவன் தவசி
பழகி தெளிந்தவன் ஞானி
தெளிந்து களித்திருப்பவன் மௌனி (முனி)
தெளிந்ததை பயில்விப்பவன் ரிஷி
விருப்பத்திற்கேட்ப உடல் உயிர் பிரித்து சேர்த்து
இறை கட்டளை செயலாக்குபவன் சித்தன்
பேரண்ட இயக்கத்தின் பொறுப்பேற்றவன் இறைவன்
Posted on by Hari

உணர்வு.. அறிவு.. உள்..

அறம், செயல், உணவு, உறக்கம்
யார் சொல்லினும் கேட்காதே
உன் உணர்வை நம்பி செயல்படு
பாரம்பரியம் வழி வகுக்கும்

உடை, உபப்பொருள், களிப்பு, கேளிக்கை
அறிவாளர் அறிவுரை கேட்டு நட
அறிவை நம்பு
அனுபவம் வழிகாட்டும்

குறிக்கோள், உறவுகள், சாகசம், ஆர்வம்
உள்ளிருந்து உதிப்பவை
உணர்திறன் தீட்டினால்
ஆன்ம துடிப்பால் அறியலாம்

Posted on by Hari

அறிதல்.. அறிவு.. ஞானம்..

ஒருவர் சொல்ல கேட்டு
படித்து பார்த்து
தொட்டு ருசித்து
ஞாபகத்தில் ஏற்றுவது
மெய்யென அறிதல்!

எங்கும் பார்க்கவில்லை
எதுவும் கேட்கவில்லை
அனால் இது தான் நடக்கும்
அதர்க்கிதுவே காரணம்
என்ற தெளிவே அறிவு!

தான் உணர்ந்ததை
மற்றவருக்கு விளக்கலாகாது
வழி காட்டலாம்
துணை செல்லலாகாது
அதுவே ஞானம்!
Posted on by Hari

ஒரு நிகழ்வுக்காக நீ.. உனக்காக பல நிகழ்வுகள்..

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

தகுதிக்கு தக்கன செயல்
தேடுவதை விட்டு
செயலுக்கு மிஞ்சிய
தகுதிகளை சேர்

செய்யும் வினைகள்
மீதம் இல்லாமல்
முழு மனத்தோடு
சீரென செய்

அறிவும் ஆற்றலும்
தேங்கும் போது
புதிய சிந்தையில்
ஆர்வம் தீட்டு

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

முன் வினை பயனால்
வெற்றி கண்டோனை கண்டு
உன் முயற்சியதை
நீ நிந்தித்திடாதே

சமூக சூழலால்
சிலர் பெரும் மதிப்போடு
உன் சுய மதிப்பை
எடையிட்டு தாழாதே

மற்றவர் ஆசைகளும்
திணிக்கும் விளம்பரங்களும்
உன் கனவென நம்பி
மாயையில் மூழ்காதே

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

இப்படி வாழ் இதை செய்
என சமூகம் சுழற்றும்
இதுவே வெற்றி அதில் பயனில்லை
என வீண் கருத்தை திணிக்கும்

உன் வெற்றியை நீ நிர்ணயி
உன் ஆழ்மன ஆனைக்கும்
அதையடையும் ஆற்றலுக்கும்
இடையின் நெருக்கமே வெற்றி

அறிவின் இடையூறின்றி
ஆசை குன்றினும்
உழைப்பால் ஆற்றல்
பெருகினும் வெற்றியே

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது

தக்க செயல் என
உள்ளுணர்வு செப்பினும்
தற்செயலே என
காரணறிவு கதைக்கும்

முற்செயலின் எதிர் வினை என
அஞ்ஞானம் பிதற்றினும்
இறைநிலையின் பேர் இயக்கம் என
மெய்ஞானம் விளக்கும்

உன் கல்வி இறையருகே
கொண்டு செல்லாவிடின்
அவ்வாற்றலை வியக்காவிடில்
நீ கற்றவையாவும் வீணே

ஒரு நிகழ்வுக்காக நீயும்
உனக்காக பல நிகழ்வுகளும்
இங்கு அரங்கேறி கொண்டிருக்கிறது
Posted on by Hari

1.. 1.. 2.. 3.. 5.. 8..

உடல் என ஒன்றும்
உயிர் என ஒன்றும்
ஒன்றென கலந்து
நினைத்த எண்ணங்கள்

குணங்கள் மூன்றும்
தோஷங்கள் மூன்றும்
உறைந்து கரைய
உரைத்த சொற்கள்

இந்திரியம் ஐந்தும்
பூதங்கள் ஐந்தும்
விலகி வழிவிட
செய்த செயல்கள்

சித்திகள் எட்டும்
ஐஸ்வர்யம் அட்டமும்
நீ விலகி நின்றினும்
நின் வசம் சேர்க்கும்

Posted on by Hari

எது அவசியம்?

உணவீட்டால் உடல் காத்தல்
உறைவிடம் உயிர் காத்தல் அத்யாவசியம்

உற்றுடன் உறவுடன் இன்புறுதல்
வெற்றிக்கு வீறுடன் செயல்படுதல் கர்மவசியம்

அடங்கி விரும்பி அகம்புகுதல்
உறைந்து தெளிந்து உயிருணர்தல் அருள்வசியம்

பயனற்ற துகளுக்கு மணமலைதல்
அறியாதோர் தூற்றுக்கு மனமுடைதல் அனாவசியம்

collecting food to preserve the body,
Shelter to preserve the life are essential.

celebrating and sharing love with family and friends,
yearning to win and hence driven actions are karmic settlements.

willfully turning inward,
experiencing inner peace are earned blessings

craving over useless scrapes,
hurt over stranger's opinions are absolutely futile
Posted on by Hari

உன் கருத்தின் மதிப்பென்ன?


நீ யார் என்ரே அறியாதவன்,
தன் கருத்திற்கு ஒத்தி நிற்க ஏற்பான்
எதிராயின் தூற்றுவான்
அவன் அனுபவிக்க அனுபவமானது
உன் வாக்கோ வீணானது

உன்னை அறிவாளன் என ஏற்றவன்,
உன் கருத்தினை ஏற்பான்
கடைபிடித்தல் சூழலுக்கேற்ப
அனுமானமாகி விதை விதைத்தது

உன்மேல் அலாதி மதிப்புடையவன்,
வேத வாக்கென வாழ்வான்
சீடனுக்கு குருவின் வாக்கு
ஆகமமாகி முழு பயனடைந்து

Posted on by Hari

விளைபொருள் விளைவி!

விளைபொருளை மறந்து
துணைப்பொருளுக்கு அலைவோரை
சராசரியானை ஆட்டுவிக்கும்
சமூக நுட்புணர்களின் சூழ்ச்சிக்கு சரிந்தோரே

உணவின் விளைபொருள் சத்து
அதனின் துணைப்பொருள் சுவை

கல்வியின் விளைபொருள் ஒழுக்கம்
அதனின் துணைப்பொருள் அறிவு

தொழிலின் விளைபொருள் உபாயம்
அதனின் துணைப்பொருள் செல்வம்

உறவின் விளைபொருள் அன்பு
அதனின் துணைப்பொருள் உதவல்

வினையின் விளைபொருள் தர்மம்
அதனின் துணைப்பொருள் புகழ்

முதுமையின் விளைபொருள் ஞானம்
அதனின் துணைப்பொருள் மதிப்பு

துணைப்பொருளால் உண்டு உபாயம்
நீர் மேல் தாமரைபோல் அனுபவி

ஆக்கப்பொருளே நிதமான வளர்ச்சி
ஆன்ம ஆணைப்படி விளைவி.

Posted on by Hari

இருளே இலக்காச்சு!

கர்ம வினையால்
ஆத்மாசை கருவாச்சு
கருதரித்து பிறப்பெடுக்க
ஜாதகம் உருவாச்சு!

கிரகத்திற் கேட்ப
வாஸ்து அமஞ்சாச்சு
சுற்றம் உற்றம் சேர
உறவும் நட்பும் சூழ்ந்தாச்சு!

எண்ணம் உணர்வும் ஊற்றெடுக்க
ரேகை வாக்குச் செயலாச்சு
பொன்னும் புகழும் ஈட்டெடுக்க
போற்றுவோர் சேர்ந்தாச்சு!

இப்பொற்றுவோரை ஈர்க்க
வந்த காரணம் மறந்தாச்சு
ரேகை வாஸ்து கிரகங்கள் பின்னோட
வழியும் சுழன்று இருளே இலக்காச்சு!

Posted on by Hari

பரி

பரியை தளர்த்தி நாமம் தொலைத்து
பரிணாம வளர்ச்சி என்று இயம்புகின்ற கூட்டத்தில்
பரியாதென்றும் நாம மெதுவென்றும் அறியாமல்
பரிகாரங்களில் சுழலும் மாந்தர்கள்
பரிகாரன் வந்து நற்சொல் உறைப்பின்
பரிகாசம் செய்து பயனிழந்தனரே!

Posted on by Hari

நீ கரு தரித்ததே!

நீ வாழும் உலகம்
நின்னை சுற்றி சுழலுமது
நீ உருவாக்கியது!

நீ ஈர்த்த மக்கள்
நீ விரும்பி வெறுத்த நிகழ்வுகள்
நின்னை வந்தடைந்தது!

நின் சிந்தையில் தோன்றிடாது
நின் ஆழ்மனம் அனுமதித்திடாது
நின் அனுவினையும் அசைக்கலாகாது!

நின் சுற்றமும் சூழலும்
நின் ஆற்றலும் தூற்றலும்
நீ கரு தரித்ததே!

Posted on by Hari

உன் செயல் சிறப்பு மிக்கதே!

ஆதாயப்படுபவன் போற்றுவான்
பாதிப்படைபவன் தூற்றுவான்
இவ்விரண்டும் இல்லா விமர்சகனின் கூற்று யாது?

இவனுக்கு ஏன் இந்த அக்கறை?
வீணாக மாட்டி கொள்கிறான்
என்று உதாசின படுத்தினாலும்

எனக்கு மட்டும் நேரம் இருந்தால்
பந்தங்கள் என்னை தடுத்திடாவிடில்
என்று ஆதங்க பட்டாலும்

உன் செயல் சிறப்பு மிக்கதே!

Posted on by Hari

பெண்ணியம்!

மழலையாய் மங்கையரை தாயென கருதி
பாலகனாய் பேதை பெதும்பையரை தமக்கை தங்கையாய் பழகி
விடலை பருவத்தில் மங்கையர் மேல் மனம் இலகினும் மதிப்பு குன்றிடா
காளை வயதில் மனையாளை மனதில் கொண்டு மடந்தையரை நோக்கி
மீளி மறவோனாக பெண்டிரை மகளென பார்த்து
முதுமகன் ஆனபின் ஆன் பெண் வேறுபாட்டை கடந்து
அனைவரும் மழலையே என அறிந்து 
முழுமையாக வாழ்ந்து முக்தி அடைவீர் ஆடவரே!

Posted on by Hari

யார் கற்பிப்பு சிறந்தது?

செல்வ ஈர்ப்பு கற்பித்தது தாய்
ஈயம் கற்றது தந்தையிடம்
ஈவதற்கு முன் ஈர்க்க வேண்டும்
ஈர்ப்பது ஈயா விடில் அது பாழ்.

Posted on by Hari

சிற்பிகள் காமுகர்களோ?

ஆலயத்தில் உள்ள சிற்பங்களை கண்டு
சிற்பிகள் காமுகர்களோ? என்று வினவினான் சாமான்யன்.

ஈன்றெடுக்கும் ஆண்மகனை கண்டு
சஞ்சலித்த தாயை கண்டீரோ?
காமத்து பாலில் கவி இயற்றி...
வண்ணம் தீட்டி...
சிலை வடித்த...
எம் கலை தாய்களும் அங்ஙனமே!
Posted on by Hari