Sep 9, 2025

கருத்துணர்வு

என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்..
என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்..
போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தளம்!

ஆசை-அறிவு, பெற்றோர்-பிள்ளை, கணவன்-மனைவி, ஆசான்-கற்பவன்..
போன்ற அனைத்துறவின் முரண்களும்,
கருத்தும் உணர்வும் மோதும் முஷ்டி சண்டையே!

பெருமூளையில் நிலைகொண்டப் பெரியோர்கள்,
சிறுமூலையில் சிக்கியுள்ள சிறியோர்களை,
பொறுத்து பேணுவதே உத்தமம்!

உணர்வு முறியம்வரை.. கருத்தை தவிர்தலும்,
அறிவு விரியும்வரை.. கருத்தை மறைத்தலும்,
அன்பு பெருகினால்.. கருத்தை கைவிடுதலும்,
முதிர்ச்சி!
Posted on by Hari