மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு.
சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்..
விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்..
உணர்வு மேலோங்கினால் சுயமும்..
உணர்வற்ற நிலையில் புத்தியும்..
சுயநினைவற்ற உறக்கத்தில் சித்தமும்..
மாறி மாறி மேலோங்கி சுழற்றும்
நிலையே மனநிலை!
விழிப்புணர்வு கவனம் கிரஹிப்பு
மனத்தின் செயற்பாடு.. பிசகினால்..
மருட்சி மயக்கம் மந்த-புத்தி வெளிப்படும்.
சுட்டி தனமும்.. மதிக்கூர்மையும்.. நன்மனத்தின் அறிகுறி.
பொறுப்புணர்வு தன்னம்பிக்கை சுயமதிப்பு
சுயத்தின் செயல்.. அஹங்காரம் மிகுந்தால்..
அகந்தை கர்வம் தற்பெருமை தலைத் தூக்கும்.
ஆணவமும் தேவை.. முனைப்போடு செயல்பட!
ஆராய்தல் ஒப்பீடு மனத்திண்மை
புத்தியின் வெகுமதி. புத்தி கசிந்தால்..
அதீத-சிந்தனை வியாகுலம் குழப்பம் சூழும்.
நுழைபுல புத்தியை.. கட்டுக்குள் அடக்கியவன் புத்தன்.
சித்தத்தின் செயல்பாடு ஆழமானது
கிரஹித்ததை பதித்தலும், உள்ளுணர்வின் ஊற்றும்
சித்தம் செய்யும் செயலே!
மனம் சுயம் புத்தி உள்ளடக்கி, சித்தத்தில் உறைந்தவனே சித்தன்.
மனம் என்ற ஐம்புலனும் ஜட கருவிகள்..
சுவாதீனம் என்பது பரஸ்பர மருட்சி..
புத்தி.. மேம்பட்டதாயினும்.. ஜடப்பொருளே!
சித்தம்.. உறக்கத்திலும் விழித்திருந்து வழிநடத்தும் பேரறிவின் பாலம்.