Sep 9, 2025

கருத்துணர்வு

என் கருத்தை புரிந்துகொள்! என்று பெருமூளையும்..
என் உணர்வை அறிந்துகொள்! என்று சிறுமூளையும்..
போராடும் போராட்டமே மனப் போராட்டங்களின் அடித்தளம்!

ஆசை-அறிவு, பெற்றோர்-பிள்ளை, கணவன்-மனைவி, ஆசான்-கற்பவன்..
போன்ற அனைத்துறவின் முரண்களும்,
கருத்தும் உணர்வும் மோதும் முஷ்டி சண்டையே!

பெருமூளையில் நிலைகொண்டப் பெரியோர்கள்,
சிறுமூலையில் சிக்கியுள்ள சிறியோர்களை,
பொறுத்து பேணுவதே உத்தமம்!

உணர்வு முறியம்வரை.. கருத்தை தவிர்தலும்,
அறிவு விரியும்வரை.. கருத்தை மறைத்தலும்,
அன்பு பெருகினால்.. கருத்தை கைவிடுதலும்,
முதிர்ச்சி!
Posted on by Hari

இல்லம்

உலகில் கள்ளமும் கபடமும் மாச்சரியம் பழகி,
அதிலிருந்து ஓய்வு எடுக்க உறையும் இடமே இல்லம்!

தன்னந்தனியே இருக்கையில், இருக்கும் மனநிலையை,
இமியளவும் மாற்றாத சூழலே இல்லம்!

சோம்பலும் சோகமும் காமமும் கோபமும் ஒளிவின்றி,
தோன்றியதும் வெளிப்பட உகந்த இடமே இல்லம்!

உன்னில் உள்ளதை உள்ளபடியே உலகம் ஏற்றுக்கொள்ளாது.
ஏற்றுக்கொண்ட ஜீவன்கள் மட்டுமே கூடி வாழுமிடம் இல்லம்!
Posted on by Hari

அந்தக்கரணம்

மனநிலை என்பது நான்கு கூறுகளின் தொகுப்பு.
சித்தம்.. புத்தி.. சுயம்.. மனம்..

விழுப்பு நிலையில் ஐம்புலனின் சப்தாதியும்..
உணர்வு மேலோங்கினால் சுயமும்..
உணர்வற்ற நிலையில் புத்தியும்..
சுயநினைவற்ற உறக்கத்தில் சித்தமும்..

மாறி மாறி மேலோங்கி சுழற்றும்
நிலையே மனநிலை!

விழிப்புணர்வு கவனம் கிரஹிப்பு
மனத்தின் செயற்பாடு.. பிசகினால்..
மருட்சி மயக்கம் மந்த-புத்தி வெளிப்படும்.
சுட்டி தனமும்.. மதிக்கூர்மையும்.. நன்மனத்தின் அறிகுறி.

பொறுப்புணர்வு தன்னம்பிக்கை சுயமதிப்பு
சுயத்தின் செயல்.. அஹங்காரம் மிகுந்தால்..
அகந்தை கர்வம் தற்பெருமை தலைத் தூக்கும்.
ஆணவமும் தேவை.. முனைப்போடு செயல்பட!

ஆராய்தல் ஒப்பீடு மனத்திண்மை
புத்தியின் வெகுமதி. புத்தி கசிந்தால்..
அதீத-சிந்தனை வியாகுலம் குழப்பம் சூழும்.
நுழைபுல புத்தியை.. கட்டுக்குள் அடக்கியவன் புத்தன்.

சித்தத்தின் செயல்பாடு ஆழமானது
கிரஹித்ததை பதித்தலும், உள்ளுணர்வின் ஊற்றும்
சித்தம் செய்யும் செயலே!
மனம் சுயம் புத்தி உள்ளடக்கி, சித்தத்தில் உறைந்தவனே சித்தன்.

மனம் என்ற ஐம்புலனும் ஜட கருவிகள்..
சுவாதீனம் என்பது பரஸ்பர மருட்சி..
புத்தி.. மேம்பட்டதாயினும்.. ஜடப்பொருளே!
சித்தம்.. உறக்கத்திலும் விழித்திருந்து வழிநடத்தும் பேரறிவின் பாலம்.
Posted on by Hari

Sep 6, 2025

ஒப்பீட்டு வழுக்கள்

தகவல் ஆற்றல் பொருள்வளம் கீர்த்தி..
அனுபவம் உணர்வுகள் சாதூரியம்..
சேர்த்தல் மட்டுமே வாழ்கை அல்ல!

உபத்திரவாய் சேர்ந்த.. பயம் ஆசை அகந்தை..
அலட்சியம் அருவருப்பு நிந்தனை..
நிதமும் களைவதுவே மேம்பாடு.

நீ பலசாலி.. இவன் அறிவாளி.. அவள் கனிவானவள்..
என்பவை ஒப்பீட்டு வழுக்கள்.. நிதர்சனம் அல்ல!
உண்மை என்று உள்வாங்கினால்.. உழன்று கொண்டே இருப்பாய்.
Posted on by Hari

Sep 5, 2025

ஏதுமாய் இல்லாதிரு

வரைமுறைக்குள் சிக்காத வாழ்வே வாழ்வு
நினைவுகள் தாக்காத உணர்வே உணர்வு
சார்பற்று கவனிக்கும் அறிவே அறிவு

விளைவு கருதாத் துணிவே துணிவு
தனதாற்றல் மறந்து பணியும் பணிவே பணிவு
தாக்குவதையும் காக்கும் கனிவே கனிவு
Posted on by Hari

Sep 3, 2025

பதவி

பசித்து புசி
தத்துவம் அசி
விழித்து வாசி
Posted on by Hari