Dec 23, 2019

உண்மை என்பது உணர்வு

உண்மை என்பது உணர்வு.
அன்பில் உண்டு, அறிவில் இல்லை!
உணர மட்டுமே முடியும், அறியலாகாது!

அறிவு என்பது வெறும் எண்ண குவியல்.
உச்சரிக்க பட்ட ஒவ்வொரு வார்த்தையும் பொய்யே!
ஒவ்வொரு செயலும் முழுமையற்றதே!

சொல்லிலும் செயலிலும் உண்மையை தேடாதே!
அவற்றை தூண்டிய உணர்வே உண்மையின் ஊன்றுகோல்.
உணர்வற்ற செயலில் உண்மையே இல்லை.

உணர்வை உணர்வால் மட்டுமே வெளிப்படுத்த இயலும்.
உண்மையை உணர மட்டுமே முடியும்.
அவ்வுண்மையை உணர்கையில் உயிர் முழுமைகாணும்.
Posted on by Hari

மூடனும்.. தெய்வமும்..

மூடன் - பெண்பால் இணை அற்ற சொல்!

பெண்மையில் மூடமையே இல்லை!
மூடரை மீட்டெடுக்க வந்த தெய்வங்களே பெண்கள்!
உன் மூடமையின் விளைவுகளை தான் ஏற்று உன்னை காக்கும் தெய்வம்.

பல தெய்வங்கள் காலில் விழ அனுமதிக்கும்...
தன் வலியை தானே ஆற்ற தெரிந்த அன்னையர் அவர்
உன் ஆணவம் தேய அத்தெய்வம் அளிக்கும் ஓர் வாய்ப்பு!

சில தெய்வங்கள் உன் மார்பில் சாய்ந்து தன் வலி ஆற்றும்...
சங்கமத்தில் உன் ஆணவம் கரையாவிடின்,
ஆண்மகனை ஈன்றெடுத்துத் தன் தவத்தை தொடரும்!

சாய்ந்த தெய்வம் சாந்தி அடைந்தால்,
உன் குலதெய்வமே உன் மடியில் விளையாடும்,
கொஞ்சி இன்புற வாய்ப்பளிக்கும்!

தெய்வம் - ஆண்பால் இணை அற்ற சொல்!
Posted on by Hari