Aug 30, 2024

மெய் சிலிர்த்தது!

சீடன்: மெய் சிலிர்கிறதே! இது என்ன உணர்வு?
குரு: அருளின் அருகாமை

சீடன்: அருகாமையா? அருளை என்னுள் உணர்வது எப்படி?
குரு: அமைதி அடை

சீடன்: முடியவில்லை
குரு: தடுப்பது எது?

சீடன்: __________
குரு: அதில் ஆர்வம் தீட்டு

(சில நாட்கள் பிறகு)

சீடன்: அறிந்து கொண்டேன்.
குரு: அதில் ஆற்றல் பெருக்கு

(சில திங்கள் கடந்து)

சீடன்: ஆற்றல் பெருக்கினேன். பல போட்டிகள் வென்றேன்.
குரு: அறிவு வளர்

சீடன்: எதற்கு?
குரு: ஆற்றல் குன்றும்

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அறிவாளி என்றுணர்ந்தேன்
குரு: அறம் உணர்

சீடன்: அறிவு போதாதா?
குரு: அறிவு பிழைக்கும்

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அறம் உணர்ந்தேனா என்று தெரியவில்லையே?
குரு: இறைத்தேடல் ஊற்றெடுத்ததா?

சீடன்: ஆம்
குரு: அய்யனை தேடு

(சில வருடங்கள் பிறகு)

சீடன்: அருள் பெற்றேன்
குரு: தெரியும்

சீடன்: எப்படி?
குரு: மெய் சிலிர்த்தது!
Posted on by Hari