Jan 17, 2018

நரகமாகும் நகரம்

இயற்கையால் கைவிடப்பட்டு, உயிர்
காக்கும் தகுதி இழந்த இடம் நரகம்

இயற்கைக்கு புறம்பாக பொருட்களை ஓரிடம் குவித்து
அதை தக்கவைக்க நிதம் பாடுபடும் இடமே நகரம்

பல்லவன் ஆக்கிய  நகரம் காஞ்சி
சோழனின் தலைநகரம் தஞ்சை

ஸ்தலங்கள் காத்து நிற்க
மீண்டும் நாடாகி நிற்கிறது

இயற்கைக்கு எதிர் வினை செய்து
நாட்டை நகரம் ஆக்கினான் மனிதன்

இயற்கையோடு ஒத்தி வாழ
அது தன்னோடு அனைத்து காக்கும்

ஒவ்வாததை தடையாயினும் புண்ணிய
கணக்கு தீரும் வரை காத்திருந்து

தீர்ந்தபின் அழித்து புதைத்து
தன் வழி நெகிழ்ந்து செல்லும்

இயற்கைக்கும் மனிதனுக்கும்
நடக்கும் கயிறிழுப்பு போட்டியில்...

இயற்கை வென்றால் நகரம் நாடாகும்
மனிதன் வென்றால் நாடு நரகமாகும்!
Posted on by Hari