களம் காணா வாய்ச்சொல்லான்
நீ வீரன் என்று சான்றளித்தல் தகுமா?
மூடர்கள் கூடி அறிவாளி
என்றிட நின்னறிவு ஒளிர்ந்திடுமா?
உன் அறத்தை அளவிட
எவ்வொறு கோலேனும் இங்குண்டா?
உன் நிதானம் அளப்பவன்
உன்னுடன் நிதம் வசித்தானா?
உன் ஸ்திரம் மதிப்பிடுவோர்
உன்னை செதுக்கிய உளிகள் அறிவாரா?
வெற்று காகிதங்களை ஈட்டி
சான்றிதழ்கள் என்று களிப்பாயா?
அளிப்பவனின் கருத்தும்
அளப்பவனின் செருக்கும் உன் ஆளுமையா?
பத்தோடு பதினொன்றாகி மற்றொருவன் கனவை
நிறைவேற்றுவது உன் இலக்கா?
சான்றோன் சான்றாண்மைக்கு
சான்றிதழ்கள் தேவையா?
நீ வீரன் என்று சான்றளித்தல் தகுமா?
மூடர்கள் கூடி அறிவாளி
என்றிட நின்னறிவு ஒளிர்ந்திடுமா?
உன் அறத்தை அளவிட
எவ்வொறு கோலேனும் இங்குண்டா?
உன் நிதானம் அளப்பவன்
உன்னுடன் நிதம் வசித்தானா?
உன் ஸ்திரம் மதிப்பிடுவோர்
உன்னை செதுக்கிய உளிகள் அறிவாரா?
வெற்று காகிதங்களை ஈட்டி
சான்றிதழ்கள் என்று களிப்பாயா?
அளிப்பவனின் கருத்தும்
அளப்பவனின் செருக்கும் உன் ஆளுமையா?
பத்தோடு பதினொன்றாகி மற்றொருவன் கனவை
நிறைவேற்றுவது உன் இலக்கா?
சான்றோன் சான்றாண்மைக்கு
சான்றிதழ்கள் தேவையா?