May 14, 2018

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?

நினைத்தது நடக்கும்.. யாருக்கு?
நினைவுகள் அற்ற நிலையில் இருந்தது
அவசியம் ஏற்படும்போது மட்டுமே நினைப்பவனுக்கு!

நீர் விலகி வழிவிடும்..
ஐம்பூதங்களில் இருந்தது விலகி வசித்து
தேவை ஏற்பட ஆணை இடுபவனுக்கு!

தொட்டவுடன் பிணி நீங்கும்..
பிரபஞ்ச சக்தி நிறைந்து வழியும்
ஸ்தூல உடலோன் மனமிரங்கி தொட்டால்!

கண்டவுடன் கன்மம் விலகும்..
என்றும் அகம் நோக்கி இருப்பவன்
என்றேனும் கனிவால் கண்கொண்டு நோக்கின்!
Posted on by Hari