நல்லவன் வல்லவன் என்ற
வீணர்களின் நிலையற்ற கருத்திற்கு
நியமம் கெட்டு...
உடல் வருத்தினாய்
மனம் அடக்கி தவித்தாய்
மஹான் என்றார்கள்
இயமம் கெட்டு...
சகமனிதனை சூரையாடினாய்
இயற்கையை துயிலுரித்தாய்
ஆற்றல் மிக்கவன் என்றார்கள்
ஆடம்பரத்திற்கு அத்தியாவசியத்தை
அடகு வைத்து தரம் கெட்டு திரியும்
ஆட்டு மந்தைகளா உன்னை வழிநடத்துவது?
இயற்கையை இழைத்து இறைச்சியாக்கி
சுகிக்கும் சமூகத்தோடு ஒன்றிவாழ
இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?
வீணர்களின் நிலையற்ற கருத்திற்கு
நியமம் கெட்டு...
உடல் வருத்தினாய்
மனம் அடக்கி தவித்தாய்
மஹான் என்றார்கள்
இயமம் கெட்டு...
சகமனிதனை சூரையாடினாய்
இயற்கையை துயிலுரித்தாய்
ஆற்றல் மிக்கவன் என்றார்கள்
ஆடம்பரத்திற்கு அத்தியாவசியத்தை
அடகு வைத்து தரம் கெட்டு திரியும்
ஆட்டு மந்தைகளா உன்னை வழிநடத்துவது?
இயற்கையை இழைத்து இறைச்சியாக்கி
சுகிக்கும் சமூகத்தோடு ஒன்றிவாழ
இன்னும் எத்தனை மூடச்செயல்கள் புரிவாய்?