Jan 26, 2024

விடுதலையின் மூன்று நிலைகள்

மனச்சலனம் குற்றவுணர்ச்சி அவமானம் மேலோங்க
சுயஅன்பு சுயமரியாதை தன்னம்பிக்கை குறைபட
பழிவாங்குதல் அவமதித்தல் இகழ்ச்சி வஞ்சித்தல்
யாவும் மூளைத்தண்டு மகார திரவத்தில் தேங்கியுள்ள குறைகள்!

இவற்றை கலைவதே முதல் நிலை வைணவம்!

மண் பொன் சுகம் புகழ் மீது ஆசை
வாழ்கை தேங்காமல் வழிநடத்தும் ஊட்டச்சத்து
தலைதெறிக்கும் ஓட்டத்தை கட்டுப்படுத்தும்
பயமென்ற கடிவாளம் நகாரத்தில் ஒடுங்கியுள்ளது

இவற்றை கடப்பதே இரண்டாம் நிலை பௌத்தம்!

வாழ்கை சூழலும் வந்து போகும் உறவுகளும்
கர்மவினை கழிக்கும் கிரஹ சாரத்தின் விளைவு
இதன் கூறு கண்டுணர்ந்து வாசி தொட்டு
வினைகள் களைந்து இறையருள் பெறுவதே

மூன்றாம் நிலை சித்தத்துவமான சைவம்!

இவ்வாறு முத்தீயை கடந்தவர் மட்டுமே
ஆகாய யகார பதிவுகளை ஆராயலாம்
புது பதிவுகளை பதிவிடலாம்
இறைவனுடன் ஐக்கியமாகலாம்
Posted on by Hari