May 22, 2020

தாய் என்பது உணர்வு

ஊழி இணைத்தது உறவு
அதுவே சமூகத்தின் திறவு

உடலளவில் கூடியது சுற்றம்
பகிர்ந்து வாழ்தல் உற்றம்

எண்ணங்கள் ஒன்றுபட்டால் நட்பு
அன்பிற்கும் அறிவிற்கும் துடுப்பு

உள்ளங்கள் பிணைந்தது குடும்பம்
பிழைபொறுத்து வாழ்ந்தால் சிறக்கும்

தாய் என்பது உணர்வு
உறவென கருதுதல் தவறு

பிறப்பால் அமைவதும் உண்டு
உணர்வால் இணைவதும் உண்டு

பார்வையால் பேசும் மீனன்னை
சிந்தையால் சொல்லும் ஆமைத்தாய்

மனிதனை ஏமாற்றுமோ இயற்கை
உணர்வால் வழிநடத்துவாள் உன் அன்னை

உறங்கி விழிப்பது இறைவனின் பொறுமை
வெளியேறி வீடுதிரும்புதல் அன்னையின் கருணை

Posted on by Hari