May 29, 2020

காரண காரியங்கள்

அமைதி தேடும் சமூகசேவையும்
வாகனம் வேண்டி பக்தி செலுத்தலும்
நோய் தீர தியானம் செய்தலும்
வீணான செயல்களே!

கண்மூடி பழக்கங்களை கைவிட்டு,
காரண காரியம் அறிந்து முயற்சியுங்கள்!

ஞானம் வேண்டுமாயின் தியானம் ஒன்றே வழி
முக்தி வேண்டுவோர் பக்தி பழகுங்கள்
மனம் அமைதியடைய நன்னெறி பற்றுதல் வேண்டும்
ஆரோக்கியம் தேடி அலைவோர் சுயஒழுக்கம் கொண்டால் போதும்
மதிப்பு போதுமென்றால் சமூக அக்கறை கொள்ளுங்கள்
இன்பத்தில் திளைக்க உடல் வருத்தி உழைத்தல் வேண்டும்

இவை அனைத்தும் வேண்டுமாயின்
அனைத்தையும் கடைபிடித்தல் ஒன்றே வழி!

Posted on by Hari