எள்ளெண்ணை தேய்த்து
108 வர்மா புள்ளிகளையும் இயக்கி
சியக்காய் கடலைமாவு தேய்த்து
இரண்டு வாளி கொதிக்கும் நீரில் நீராட்டிட..
அவன் சக்திக்கு இயன்றவரை தனது பிஞ்சு கைகளால் தடுத்தும் மழலை கூவல் கூவியும் விலகி ஓட போராடுவான். கண்களில் கண் வைத்து கெஞ்சியும் பார்ப்பான். அனைத்தும் முடிந்து வெளியேறி தலை துவட்டிட கட்டி அணைத்து கொஞ்சிடுவான்.
பாடம் 1: அவன் வெறுப்பது அந்நிகழ்வை மட்டுமே. நிகழ்த்துபவரை அல்ல
தொலைக்காட்சியை எவ்வளவு வியந்து ரசித்து பார்த்து கொண்டு இருந்தாலும்,
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.
பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே
நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.
அலைவரிசையை மாற்றினால் சிறிதும் சிணுங்காமல் புது நிகழ்ச்சியை அங்ஙனமே ரசித்து பார்க்கிறான்.
கோவம் இல்லை அடம் இல்லை.
காரணம் அவன் பார்ப்பதன் மீது அவனுக்கு பற்றே இல்லை.
பாடம் 2: நமது ஒவ்வொரு கோவத்தின் எழுச்சிக்கு பின்னிருப்பது, நாம் பற்றி நிற்கும் பற்றே
நிகழ்வை, நிகழ்த்துபவரை, சந்தர்ப்பத்தையும் கோள்சூட்டி நமது பற்றையும் சுயமதிப்பையும் தக்கவைத்து கொள்கிறோம். பிஞ்சு மழலைக்கு அவ்வளவு தந்திரம் தெரிவதில்லை.