Dec 9, 2017

1.. 1.. 2.. 3.. 5.. 8..

உடல் என ஒன்றும்
உயிர் என ஒன்றும்
ஒன்றென கலந்து
நினைத்த எண்ணங்கள்

குணங்கள் மூன்றும்
தோஷங்கள் மூன்றும்
உறைந்து கரைய
உரைத்த சொற்கள்

இந்திரியம் ஐந்தும்
பூதங்கள் ஐந்தும்
விலகி வழிவிட
செய்த செயல்கள்

சித்திகள் எட்டும்
ஐஸ்வர்யம் அட்டமும்
நீ விலகி நின்றினும்
நின் வசம் சேர்க்கும்

Posted on by Hari