Dec 9, 2017

நீ கரு தரித்ததே!

நீ வாழும் உலகம்
நின்னை சுற்றி சுழலுமது
நீ உருவாக்கியது!

நீ ஈர்த்த மக்கள்
நீ விரும்பி வெறுத்த நிகழ்வுகள்
நின்னை வந்தடைந்தது!

நின் சிந்தையில் தோன்றிடாது
நின் ஆழ்மனம் அனுமதித்திடாது
நின் அனுவினையும் அசைக்கலாகாது!

நின் சுற்றமும் சூழலும்
நின் ஆற்றலும் தூற்றலும்
நீ கரு தரித்ததே!

Posted on by Hari