Dec 9, 2017

இருளே இலக்காச்சு!

கர்ம வினையால்
ஆத்மாசை கருவாச்சு
கருதரித்து பிறப்பெடுக்க
ஜாதகம் உருவாச்சு!

கிரகத்திற் கேட்ப
வாஸ்து அமஞ்சாச்சு
சுற்றம் உற்றம் சேர
உறவும் நட்பும் சூழ்ந்தாச்சு!

எண்ணம் உணர்வும் ஊற்றெடுக்க
ரேகை வாக்குச் செயலாச்சு
பொன்னும் புகழும் ஈட்டெடுக்க
போற்றுவோர் சேர்ந்தாச்சு!

இப்பொற்றுவோரை ஈர்க்க
வந்த காரணம் மறந்தாச்சு
ரேகை வாஸ்து கிரகங்கள் பின்னோட
வழியும் சுழன்று இருளே இலக்காச்சு!

Posted on by Hari