Dec 9, 2017

அறிதல்.. அறிவு.. ஞானம்..

ஒருவர் சொல்ல கேட்டு
படித்து பார்த்து
தொட்டு ருசித்து
ஞாபகத்தில் ஏற்றுவது
மெய்யென அறிதல்!

எங்கும் பார்க்கவில்லை
எதுவும் கேட்கவில்லை
அனால் இது தான் நடக்கும்
அதர்க்கிதுவே காரணம்
என்ற தெளிவே அறிவு!

தான் உணர்ந்ததை
மற்றவருக்கு விளக்கலாகாது
வழி காட்டலாம்
துணை செல்லலாகாது
அதுவே ஞானம்!
Posted on by Hari